நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. கிருஷ்ணசாமி பாவலர்

விக்கிமூலம் இலிருந்து

திரு. கிருஷ்ணசாமி பாவலர்

இவர் சிறு வயதில் என்னுடன் சுகுணவிலாச சபையில் நடித்தவர். என்னுடன் சாரங்கதராவில் சுமந்திரராகவும் மனோகராவில் ராஜப்பிரியனாகவும் நன்றாய் நடித்தது ஞாபகமிருக்கிறது. இவர் தமிழில் நல்ல தேர்ச்சி பெற்றவர், கவிகள் பாடுவதில் சிறந்த பெயர் எடுத்தவர். ஒருவிதத்தில் இவரை ஆசுகவி என்றே கூறலாம். அவ்வளவு விரைவாக விருத்தங்கள் கட்டுவார். தனது நாடகங்களுக்கு வேண்டிய பாட்டுகளைத் தானே கட்டியிருக்கிறார். பிறகு தானாக பால நாடகசபையை ஏற்படுத்தினார். அதற்காக அவர் எழுதிய நாடகங்கள் பதிபக்தி, பம்பாய் மெயில், பஞ்சாப்கேசரி, கதர்பக்தி முதலியவைகளாம்; இவர் இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் வெள்ளிவிழா (silver jubilee) நடந்தபோது தன்னுடைய பாலசபையினரை அழைத்துக்கொண்டு இங்கிலாந்துக்குப்போய் அச்சமயம் பல தமிழ் நாடகங்கள் நடத்தினார்.