நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. சந்தானகிருஷ்ண நாயுடு

விக்கிமூலம் இலிருந்து

திரு. சந்தானகிருஷ்ண நாயுடு

இவர் சிறுவயதில் நாடகமாடியதாகக் கேள்விப்படுகிறேன். இவர் முத்துசாமி கவிராயருடைய சிஷ்யர். ஆரியகான சபை என்னும் நாடக சபைக்கு இவர் சில நாடகங்களையும் அவற்றிற்குரிய பாட்டுகளையும் எழுதியதாகத் தெரிகிறது. ஆயினும் அவைகளில் ஒன்றும் அச்சிடப்பட்டதாகக் காணோம்.