நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. புத்தனேரி ரா. சுப்ரமணியம்

விக்கிமூலம் இலிருந்து

திரு. புத்தனேரி ரா. சுப்ரமணியம்

இவர் திருநெல்வேலியில் பிறந்தவர், உயர் வேளாள ஜாதியைச் சேர்ந்தவர். இவர் தன் சிறு வயது முதல் T. K. S. சகோதரர்களோடு ஒத்துழைத்து வருகிறார். ராமாயணத்தில் ராமலட்சுமணர் சகோதரர்கள் நால்வரோடு ராமருக்கு மிகவும் அன்யோன்ய சிநேகிதரான குகனையும் சேர்த்து ஐவரையும் ஒரே சகோதரர்களாக பாவிக்க வேண்டுமென்று ஒரு கவி கூறியுள்ளார். அதுபோலவே இவர் T.K.S. நான்கு சகோதரர்களோடு மிகவும் அன்யோன்யமாய் பல வருடங்களாக தமிழ் நாடகத்தின் பலவித தொண்டுகளுக்காக உழைத்து வருகிற படியால் இவரை T. K. S. சகோதரர் நால்வரோடு ஐந்தாவது சகோதரராக கருதினால் தவறாகாது. இவர் சிறு வயது முதல், தமிழ் நன்றாய்க் கற்று நல்ல பாண்டித்யம் அடைந்து கவிதைகள் பாடும் வழக்க முடையவரானார். T. K. S. சகோதரர்கள் நாடக சபையை சேர்ந்து அவர்கள் சபைக்கு அநேக நாடகங்களுக்கு வெகு அழ கான பாட்டுகளை எழுதியுள்ளார். மேலும் அச்சபையார் நடத்திய நல்ல நாடகங்களில் ஒன்றுகிய 'சிவகாமியின் சபதம்' என்னும் கதையை நாடகரூபமாக எழுதிக் கொடுத்திருக்கிறார். அன்றியும் சில சமயங்களில் அச்சபையில் நடித்துமிருக்கிறார், இவர் இயற்றமிழுக்காக சேவை செய்து செந்தமிழ் செல்வி முதலிய பத்திரிகைளுக்குப் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். சில தொடர் கதைகளும் எழுதியிருக்கிறார். ஆகவே இவரை இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழ் மூன்றிற்கும் சேவை செய்துவரும் ஒரு முத்தமிழ்வித்தகர் என்று ஒருவாறு கூறுவது மிகையாகாது. எனது எண்பதாவது வயதில் தமிழ் நாட்டு நடிகர் கள் செய்த பெரிய மரியாதையில் இவர் பெரும் பங்கு எடுத்துக் கொண்டவர். பல சமயங்களில் என்னைப் புகழ்ந்து பல கவிதைகள் பாடியுள்ளார். திருவள்ளுவர் ஒருவருடைய குணத்தையும் குற்றத்தையும் கருதவேண்டுமென்று கூறியுள்ளார். அதன்படியே இவருடைய ஒரு குற்றத்தை நான் இங்கு எழுதுகிறேன். அதாவது என்னைப்பற்றி அதிகமாய் புகழ்ந்திருப்பதேயாம். இவருக்கு சுமார் 41 வயதாகிறது. இவர் இன்னும் 40 வயதிற்கு மேல் முத்தமிழுக்கும் உழைத்து தமிழ் அன்னையின் பேரருளைப் பெறுவாராக.