நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. N. S. கிருஷ்ணன்

விக்கிமூலம் இலிருந்து

திரு. N. S. கிருஷ்ணன்

இவர் சிறு வயதிலேயே நாடகக் கம்பெனிகளில் நடிக்கும் நடிகர்களைப்போல் நடித்து அவர்களை ஏளனம் செய்து வந்தார். இந்த வழக்கம் முற்றி பெரியவனான பிறகு நல்ல ஹாஸ்ய நடிகரானார். அதன்பேரில் இவரும் இவருடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்த ஸ்ரீமதி மதுரம் அம்மாளும் ஹாஸ்ய பாகங்களுக்காகவே அநேகம் பேசும் படங்களில் அழைக்கப் பட்டு வந்தனர். இவருக்கு மரியாதை செய்ய ஒரு பெரும் கூட்டம் கூடினபோது ஒருவர் இவர் அதுவரையில் 102 பேசும் படங்களில் நடித்ததாக கூறியது ஞாபகமிருக்கிறது. சாதாரணமாக ஏதாவது ஒரு பேசும் படம் நன்றாயிராவிட்டால் இவரையும் ஸ்ரீமதி மதுரத்தையும் அதில் ஹாஸ்ய பாகத்தில் நடிக்கும்படி செய்தால் சரியாக போய்விடும் என்று சிலர் வேடிக்கையாய் சொல்வார்கள், இவரும் ஏதாவது பேசும் படம் சுவஸ்தமாயில்லாவிட்டால் எங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தால் சுவஸ்தப்படுத்திவிடுவோம் என்று வேடிக்கையாய் சொல்வார். இவர் விதி வசத்தால் அந்திய காலத்தில் பெரும் கஷ்டம் அநுபவிக்க நேரிட்ட போதிலும் நடிப்பதை மாத்திரம் விடவில்லை. கடைசியில் பாகவதரைப் போல் வேஷம் பூண்டு “கிந்தனார்" என்னும் ஹாஸ்யக் கதையை நடத்தி சபை யோரை நகைக்கச் செய்தார். இவரும் தியாகராஜ பாகவதரைப்போல் நடுவயதிலேயே காலமானார்.