நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. P. S. தாமோதர முதலியார்

விக்கிமூலம் இலிருந்து

திரு. P. S. தாமோதர முதலியார்
இவர் எனது ஆருயிர் நண்பர் C. ரங்கவடிவேலுவின் மைத்துனர், முதலில் M. P. T. அசோசிஷேனில் நடித்தவர்.

பிறகு எங்கள் சபையை சேர்ந்தார். இவர் நடிக்கும் திறத்திற்கு தக்கபடி சில பாத்திரங்களை இவருக்கு கொடுத்து வந்தேன். அவைகளில் முக்கியமானவை அமலாதித்யன் நாடகத்தில் லீலா தரனும், விரும்பிய விதமே நாடகத்தில் ஜகந்நாதனுமாம். இவரது முக்கியமான குணம் ஒன்று என்னவென்றால் தான் நடிக்கும் பாகத்தில் நான் சொல்லிக் கொடுத்த நடிப்பு தனக்கு சரியாக வராவிட்டால் “வாத்தியார், வாத்தியார்! இன்னொரு தரம் சொல்லுங்கள், இன்னொருதரம் சொல்லுங்கள்" என்று வற்புறுத்துவார், நான் சொல்லிக் கொடுத்தது சரியாக வரும் வரையில் என்னை விடமாட்டார். இவர் சுமார் 15 வருடங்களுக்கு முன்பாக பூரண சன்யாசம் வாங்கிக் கொண்டு அந்த ஆஸ்ரமத்தின் முறைப்படி இன்றும் ஈஸ்வரன் கிருபையால் வாழ்ந்து வருகிறார். இவரது வயது தற்காலம் 89 ஆகும்.