நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/காமத்துப் பால்

விக்கிமூலம் இலிருந்து

காமத்துப் பால்
40 காமநுதலியல்


முயங்காக்காற் பாயும் பசலைமற் றுடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; வயந்கோதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு 391


தம்மவர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்குந் துணையில்லார்க்-கிம்மெனப்
பெய்ய எழிலி முழங்குந் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து 392

கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மார்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று 393

செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்ட நீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன்-மெல்விரலின்
நாள் வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்
தோள்வைத் தணைமேற் கிடந்து 394

கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்-பின்சென்றும்
ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்
கோட்டிய வில்வாக் கறிந்து 395

அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ;-அரக்கார்ந்த
பஞ்சிகொண் டுட்டினும் பையெனப் பையெனவென்(று)
அஞ்சிப்பின் வாங்கும் அடி 396

ஒலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
மாலை பரிந்திட் டழுதாள் வனமுலைமேற்
கோலுஞ்செய் சாந்தந் திமிர்ந்து 397

கடக்கருங் கானத்துக் காளையின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி; சுடர்த்தொடீஇ!
பெற்றானொருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதுறும் ஆறு 398

முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
தீம்பாவை செய்த குறி 399

கண்முன் றுடையானும் காக்கையும் பையரவும்
என்னீன்ற யாயும் பிழைத்ததென்-பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய் பொருள்வயிற்
பாங்கனார் சென்ற நெறி 400


★ ★ ★


ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.