நேரு தந்த பொம்மை/பிறந்த நாள்

விக்கிமூலம் இலிருந்து

கண்ணைப் போல நாட்டினைக்
காத்து வளர்த்து வந்தவர்;
எண்ணம், வாக்கு செயலிலே
என்றும் தூய்மைஉடையவர்.
[இன்று]


பார தத்துக் குழந்தைகள்
பண்பு பெற்றுச் சிறக்கவே
நேரு கனவு கண்டனர்;
நிறைவு செய்வோம்
நாமுமே. [இன்று]


பிறந்த நாள்


குழந்தை யெல்லாம் கூடுவோம்;
கூடிக் குதித்தே ஆடுவோம்;
மழலை மொழியில் பாடுவோம்;
மகிழ்ந்து தாளம் போடுவோம்.

“குழந்தை யோடு பழகவும்,
குழந்தை யோடு பேசவும்.
குழந்தை யோடு ஆடவும்
கொள்ளை ஆசை உள்ளது.”

என்று சொன்ன நேருவை

இந்த நாடு பெற்றநாள்.

என்றும் நமது நெஞ்சிலே

இருக்கும் நேரு பிறந்த நாள்.

'எனது பிறந்த நாளையே

இன்ப மூட்டும் குழந்தைகள்

தினமாய்க் கொள்வோம்’ என்ற நம் தேசத் தலைவர் பிறந்தநாள்.

இந்தி யாவில் மட்டுமா?

இல்லை, இல்லை, உலகிலே

எந்த நாட்டுக் குழந்தையும்

இவரைப் போற்றும் நல்ல நாள்.

தேச நலனை எண்ணியே

தினமும் பாடு பட்டவர்;

ஆசை யாக நாமெலாம்

அழைக்கும் 'மாமா' பிறந்தநாள்.

நாட்டை ஆளும் தலைவராய்

நாமும் ஆக நல்வழி

காட்டிச் சென்ற நேருவின்

கதை படித்து மகிழுவோம்.