பக்கம்:அகத்திய முனிவர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அகத்திய முனிவர். ஆன்றோர் பலர்க்கும் அறிவூட்டி வான்றோய் புகழோடு இங்கனம் மருவி கின்ற இவர், தென் மதுரை, மகேந்திரமலை, கபாடபுரம், பொதியமலை, தண்டகவனம், விக்கம்,தமனியம், எமகூடம், காசி, நைமிசம், கயா, இமயம் என்னும் இப்பன் னிரண்டிடங்களிலும் காலந்தோறும் கலந்தினி திருந்தார். இவ் இனிய இடங்கள் எல்லாவற்றுள்ளும் பொதியமலையே இவர்க்குமிகவும் உரிமையாயிருந்தது. அதனல் பொதிய முனி வன், மலய மாதவன் என இவர் பெயர்பெற்று கின்ருர், சானகியைத் தேடி வரும்படி வானரங்களுக்குக் கூறி விடுங் கால் சுக்கிரீவன் இவரை மிக வியத்து குறித்து விடுத்துளான். அன்று அவன் கூறியபடியை அடியில் காண்க. தென்தமிழ்நாட் டகன் போதியிற் றிருமுனரிவன் கமிழ்ச்சங்கம் - சேர்கிற் பீரேல் என்றுமவன் உறைவிடமாம் ஆகலினல் அம்மலையை இறைஞ்சி பேகிப் பொன்றிணிந்த புனல்பெருகும் பொருநையெலும் கிருதியின் பொழிய நாகக் - கன்.ற வளர் கடஞ்சாால் மகேந்திரமா நெடுவரையுங் கடலுங் காண்டிர். (இராமாயணம்.) முனிவன் சங்கம் சேர்கிற்பீரேல் இறைஞ்சி öJTň ன் என்ற இகளுல் அக்காலத்தவர் இம்மூர்த்திபால் கொண்டிரு ந்த அன்பும் பணிவும் அறியலாகும். இவர் இருந்த இடமெல் லாம் கமிழ்ப் புலமை மிக்க முனிவர்குழாம் அமர்ந்திருந்த வுண்மையையும், இவரது சிறந்த தன்மையையும் இதவிைளக்கி கிற்றல் காண்க. பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் எழுந்தரு வியிருந்த முனிவர் இருப்பினை வானா மன்னன் வாயிலா கக் கம்பர் உணர்த்தியிருக்கும அருமை யிண்டு ஊன்றியுணா த்தக்கது. இப்பெருமானுக்கு இருப்பிடமாயிருக்கலினல்