பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4]களிற்றியானை நிரை௧௫

 

காற்றெறியப்படுதலின் விரைந்து துளி சிதறினவென் றவற்றையும் புதுமை கூறினான். 'எனவே இவையெல்லாம் பருவந் தொடங்கி யணித்தென்றமையின், வற்புறுத்தற்கு இலேசாயிற்று. 'குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி' என்பது, கொய்யாத உளை பல்கியும் கொய்த உளை பலகாலும் கொய்ய வேண்டுதலுமுடைய குதிரை யென்றவாறு; எனவே தனது மனப் புகழ்ச்சி கூறியவாறு. அத்துணை மிகுதியுடைய குதிரை பூட்டின வாரொலி விலக்காது மணியொலி விலக்கி வாரா நின்றான், அங்ஙனம் மாட்சிமைப்பட்ட மான் தேர னாதலான் என்றவாறு. அதற்கென்னை காரணமெனின், 'துணையொடு வதியும் தாதுண் பறவை' எனவே, பிரிவஞ்சி யென்றவாறு. மணி நா வொலி கேட்பின் வண்டு வெருவு மாகலின் அது கேளாமை மணி நாவினை யியங்காமை யாப்பித்த மாண் வினைத் தேரனாகி வாரா நின்றானென இவையெல்லாம் தலைமகள் வன்புறைக் கேதுவாயின. 'கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது, நெடும் பெரும் குன்றத் தமன்ற காந்தள்' தெய்வமலை யாகலான் அதனுள் அமன்ற காந்தளைத் தெய்வப் பூ வெனக் கூறி, அவை போதவிழ்ந்தாற் போல அவர் புணர்ந்த காலத்துப் புதுமணம் கமழ்ந்த நின் கைத் தொடிகள் அவை அரியவாகிப் பிரிந்த காலத்துப் போன்று வடிவொத்து மணங் குறைபட்ட துணையேயால் அவர் பிரிந்து செய்த தன்மையின் என இதுவும் வன்புறைக்கே உறுப்பாயிற்று. இவ்வாறே பலவும் நோக்கி யுணர்தற்குக் கருவியாகிய சொல்லும் பொருளும் எல்லாம் 'மாத்திரை முதலா வடிநிலை காறும்' என அடங்கக் கூறி நோக்குதற்குக் காரணம் நோக்கென்றான் என்பது.

1'மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்று' என்னும் சிந்தாமணிச் செய்யுள் உரையில், நச்சினார்க்கினியர் வண்டிற்குச் செவியறிவுண்டெனக் கூறிப் 'பூத்த. . .தேரன்' என்னும் இச் செய்யுட் பகுதியை எடுத்துக் காட்டினர்.

2'ஏனோர் மருங்கினும்' என்னும் சூத்திர உரையி4ல் இச் செய்யுளை யெடுத்துக் காட்டி, 'இதனுள் முல்லைக்குரித்தாகிய நிலமும் காலமும் கருப்பொருளும் இருத்தலாகிய உரிப் பொருளும் வந்தவாறு கண்டு கொள்க' எனவும், 3'முதல் கரு உரிப் பொருள்' என்னுஞ் சூத்திரவுரையில் இதனை எடுத்துக் காட்டி, 'முல்லைக்கு முதலும் கருவும் வந்து, உரிப் பொருளாற் சிறப்பெய்தி முடிந்த்து' எனவும் முறையே கூறுவர் இளம். நச். 'குரங்குளை. . . பரிய' என்பதனையும், 'இரும்பு. . . தெறிப்ப' என்பதனையும், 4'மொழிமாற்றுப் பொருள்கோளுக்கு உதாரணம் காட்டினர், நச்.




1. சீவக.௮௯௨. 2. தொல். அகத். ௨௪. 3. தொல். அகத்.௩. 4. தொல். எச்ச. ௧௨.