உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காட்கில் காம்போதி "காங்கிரஸ் ஆட்சியின் தவறுதல்களையும் திறமை யின்மையையும் மக்கள் மறந்துவிட வேண்டும். காங் கிரஸ் சர்க்கார் சில தவறான காரியங்களை செய்திருக்கக் கூடும்." மந்திரி காட்கில் பூனாவில் நடைபெற்ற பொதுத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இதுபோல பேசியிருக்கிறார். இதோடு மட்டுமல்ல; காங்கிரஸையே ஆதரிக்க வேண்டுமென்றும் கூறியிருக்கிறார். தவறுதல் செய்த காங்கிரஸ்! திறமையில்லாத ஆட்சி! ஆனால் மீண்டும் பதவிக்கு வரவேண்டும். தவறுதல்களின் பட்டியலைத் தரவில்லை காட்கில்! ஆயிரத்து தொளாயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி பிரயோகம் செய்தது. மூவாயிரத்துக்கு மேற்பட்ட வரின் மூச்சை நிறுத்தியது. பதினாயிரம் பேர்களை காயப் படுத்தியது. ஐம்பதாயிரம் பேர்களை சிறையில் தள்ளி யது-எண்பதுக்கு மேற்பட்டவர்களை சிறைப் பிணமாக் குன்றத்தூர் - கூச்பீகார் நடத்தியது. நெச