பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

சந்தையில் கூடுகின்ற மக்களிடத்தில் சாக்ரடீஸ் அறிவுரை சொன்னார்.

கேட்டவர் சிலர்; கேளாதவர் பலர். ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கருத்துக்கள் தத்துவமாக ஒளிவீசுகிறது—உலகத்தின் பாராட்டைப் பெறுகின்றது.

அன்று பத்துப் பேருக்கு முன்னால் சாக்ரடீஸ் சொல்லிய கருத்துக்கள் வெற்றி பெற்றதா என்றால்,இல்லை.

ஆனால்... இங்கு பத்து லட்சம் மக்களுக்கு முன்பு தன் அறிவுக் கருத்துக்களைச் சொல்லுகிறார் அண்ணா; சொல்லமட்டுமல்ல - வெல்லவும் செய்கிறார்.

அறிவு மழையை-வையத்துக்கு விருந்தாக்கிய தென்னாட்டு காந்தி அண்ணா. அவர்களுக்கு தமிழினம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறது.

அறிஞரின் அழகிய சொற்களை, சொல்லாரமாகத் தொகுத்துத் தந்திருக்கிறார் — அண்ணா கவியரங்கில் ‘அண்ணா தத்துவ மேதை’ என்ற தலைப்பில் கவி மழை பொழியும் என்நண்பர், கவிஞர் தமிழ்ப்பித்தன் அவர்கள். அவருக்கு என் நன்றி.

அன்பன்,
கே. ஆர். நாராயணன்