பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


தூத்துக்குடி உப்பு, தொழில் துறைக்குப் பயன்படும். ஜப்பான் நாட்டுக்கு எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.

20 கோடி ரூபாய்க்குத் துறைமுகத் திட்டம் முடியும் என்றார்களே தவிர, அக்கறைகாட்டாமல், "இதோ வருகிறது அதோ வருகிறது" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். சேலம் இரும்பு ஆலை 1967-ல் வரும் என்றார்கள்; அதுவும் வரவில்லை!

சேலம் இரும்பாலை, தூத்துக்குடித் துறைமுகம் ஆகிய "திட்டங்களுக்காக மத்திய அரசை எதிர்த்து எல்லா அமைச்சர்களும் சிறை செல்லத் தயாராக இருக்கிறோம். இதை மத்திய அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தன் வீட்டுக் கதவைத்
தட்டுதல் நியாயம்

எதற்கெடுத்தாலும் டெல்லியைக் கேட்கிறார்களே என்று சொல்கிறார்கள். டெல்லியைக் கேட்காமல் வேறு யாரைக் கேட்பது? தன் வீட்டுக் கதவைத் தட்டுவானே தவிர எதிர் வீட்டுக் கதவையா தட்டுவான்?

மாமியார் பீரோவைப் பூட்டி, சாவியை முந்தானையில் முடிந்து இருக்கும் போது, விருந்தாளிக்கு காபி கொடுக்க வெள்ளித் தம்ளரை எப்படி எடுக்கமுடியும்? மருமகள் மாமியாரைக் கேட்காமல் எதிர்வீட்டு அலமேலுவையா சாவிக்கு கேட்பாள்? பெட்டிச்சாவியை கீழே போட்டு விட்டு தேவையானதை எடுத்துக் கொள்ளட்டும்.

ஜனநாயகம்
உயிர் வாழ......

மேற்கு வங்க அரசு டில்லியிலுள்ள மத்திய அரசினால் கலைக்கப்பட்டது பற்றி என்னிடம் கருத்துக் கேட்கப்பட்டது.