பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92


துலக்குவதற்குள் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்து விடலாம்.

சிறிய டிராக்டர் வைத்து இருக்கிறார்கள். என்ன விலை என்று கேட்டவுடன் ஒரு புத்தகத்தை திறந்து காட்டி ஒரு பகுதி முன் பணம் கொடுத்து விட்டு மீதியை மாதா மாதம் செலுத்துகிறோம் என்று சொல்கிறார்கள். கூட்டுறவு இயக்கத் தில் ஈடுபட்டு இருப்பதால் இவ்வளவு அவர்களுக்கு கிடைக்கிறது. நாம் எல்லாத் துறைக்கும் கூட்டுறவு முறையை பயன்படுத்தலாம். பின்னல் போன்று நமக்கு எல்லா இடத்திலும் அமைப்புகள் இருக்கிறது. ஆனால் அதிலே சிக்கல் இருக்கிறது. அறிவாற்றல் உள்ளவர்கள் தங்கள் அனுபவத்தை கூட்டுறவு இயக்கத்துக்கு தந்துதவ முன் வரவேண்டும்.

பஸ் தொழில்
நாட்டுடைமை

ஆட்சிப் பொறுப்பில் அமருவதற்கு முன்பே பஸ் தொழிலை நாட்டுடமையாக்குவோம் என்பதை மக்கள் முன் எடுத்துரைத்து வந்திருக்கிறோம்- ஆட்சிக்கு வந்த பின்னர் சட்ட மன்றத்தில் எடுத்துக் கூறி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. யாரிடத்திலும் கசப்புணர்ச்சி கொண்டதால் அரசு இதைச் செய்யவில்லை.

எந்த ஒரு அரசும் தன் வருவாயைப் பெருக்கிட இத்தகைய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது இயற்கை. மக்களின் தேவைகள் வளர்ந்து வருகின்றன. அந்தத் தேவைகளின் வளர்ச்சிக்கேற்ப வரிகளைக் கூட்டிச் செல்லக் கூடாது. அரசு புதிய வருவாய்களைத் தேடவேண்டும். அத்தகைய ஒரு முயற்சியே இது.

ஆரணிக்குப் புதிய பஸ் விடுகிறோம். இதில் ஏற்கனவே பஸ் விட்டுக்கொண்டிருந்த ராஜகோபால் நாயுடு மிகுந்த