பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§i) வில் முக்கிய வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் தயாரிப்புகளின் விலைகளைக் குறைத்திடுங்கள். சில ஆண்டுகளாயினும் இலாபத்தின் ஒரு பகுதியை இழந்தாயினும், விலகுறைக்க உற்பத்தியாளர்கள் தயங்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். உற்பத்தி செய்து விட்டு விலையைக் கூட்டி விட்டால் அவை வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கும். அப்படிஇல்லாமல், இத்தகைய தொழில் உற்பத்திப் பொருள்கள் பட்டிகள்தோறும் பர வி விவசாயப் பெருங்குடி மக்களுக்கு அவர்கள் ஆற்றும் உணவு உற்பத்திப் பணி யி ல் பயனளித்திட வேண்டும். . இவ்வாருன நிலைமை உருவாகிடவும் தமிழ் நாட்டில் தொழில் முன்னேற்றம் தங்குதடையின்றி ஏற்படவும் உற்பத்தி அதிகரித்திடவும். தொழில் துறையில் குறைந்தது பத்தாண்டுக் காலத்துக் கேனும் சச்சரவுகள் இல்லாது தொழில் அமைதி நிலவ வேண்டும். தொழில் சச்சரவுகள் கதவடைப்பு என்னும் பெயரிலோ எந்த வடிவத்தில் தொழில் சச்சரவு ஏற்பட்டாலும், அது தொழிலுக்குக் குந்தகத் தையே ஏற்படுத்தும் என்பதால் தொழில் சச்சரவுகள் பத்தாண்டுக்காயினும் ஒத்தி ைவ க் க ப் பட வேண்டும். வகைப்படு: பொருளாதாரம்-தொழில் பெருக்கம். (18-12-67 அன்று எண்ணுளரில் கிரிலோஸ்கர் நிறு வன விழாவில் ஆற்றிய தலைமை உரை.)