பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு : போ, மாமா! ராஜர் கதை சொல்லு. சு: மாமாவுக்கு பாட்டுக்கூடத் தெரியும், ஜோராப் பாடுவார். சிறு : வேணாம். மாமா கதை சொல்லட்டும், அக்கா பாட்டு பாடட்டும். அது சரியான யோசனை. முதலிலே பாட்டு. சே : பிறகு கதை. சிறு: அக்கா ! பாடு அக்கா, ஒரே ஒரு பாட்டு. சரி, நான் பாடுகிறேன், நீங்களும் கூடச் பாடணும் தெரியுதா? சேர்ந்து பாடு [ குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டே கிறாள். குழந்தைகளும் பாடுகின்றன. இடை யிடையே, பாட்டின் சில பகுதிகளை மாற்றித் தன் காதலைத் தெரிவிக்கும் கருத்துடன், குழந்தை. கள் அறிந்து கொள்ளாதபடி பாடுகிறாள்.] சு: ஆமாம்! நாம் இங்கே இப்படியே விளையாடிக்கொண் டிருக்கிறோமே, அப்பா என்ன சொல்வார்? சிறு : அக்கா, அப்பா பொல்லாதவரா? சு: இல்லை கண்மணிகளே! அப்பா ரொம்ப நல்லவர். காட்சி 9 இடம் :- கருணாகரத்தேவர் வீடு. இருப்போர்:--தேவர், ஜெமீன்தார், ஜெகவீரர். (தேவர் கவலையுடன் உட்கார்ந்திருக்கிறார். ஜெகவீரர் கோபமாக உலாவிக்கொண்டே பேசுகிறார்.] ஜெக: இரவு நேரம், வீட்டிலே பெண் இல்லை. இப்படி இருக்கிறது குடும்ப இலட்சணம். தே: நிலாவிலே, வேடிக்கையாக நண்பர்களுடன் யாடப் போனாள் சுசீலா, அதிலே என்ன தவறு? 'ஜெ: சுத்தப் பைத்தியக்கார மனுஷர். இந்த நிலவிலே இளம் பெண்ணை வெளியே அனுப்புவதா? ..13

விளை

13