பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காட்சி 18 இடம்: சேகர் வீடு. இருப்போர்: சேகர் [அவசரமாகக் கோட்டு போட்டுக்கொண்டு சில மருந்துகளையும் பெட்டியில் வைத்துக்கொண்டு புறப்படுகிறார்.) காட்சி 19 இடம் :- தேவர் வீடு. இருப்போர் :- தேவர். [தேவர் சேகர் வரவுக்காகக் காத்திருக்கிறார். சேகர் அவசரமாக வருகிறார்.] தே: சந்தடி செய்யாதீர். டாக்டர் உட்காரும். தே தாயா? [டாக்டர் சேகர், ஸ்டெதாஸ்கோப் எடுக்கிறார் - பரிசோதிக்கிறார்.) பார் சேகர் ? எப்படி அடித்துக் கொள்கிறது பார்த் சே: ஆமாம்? கொஞ்சம் படுத்துக்கொள்கிறீரா? சரியாக பார்க்கவேண்டும். தே: பைத்யம்? சேகர், அதையெல்லாம் சுருட்டி வை பெட்டியில், உட்கார் இப்படி. சே : இதயக் கோளாறு என்றீரே... தே: ஆமாம். நெடுநாளைய வியாதி. ஆனால்? சுசீலா அதை சொஸ்தப்படுத்திவிட்டாள். உட்கார் சேகர். சே: மார்புகூட, படபட என்று அடித்ததே. தே: நோயால் அல்ல? பேய் அறைந்துவிட்டது என்னை. ஏன் அப்படி விறைத்துப் பார்க்கிறாய்? பேயாவது, பிசாசாவது, இதை எல்லாம் யார் நம்புவது என்கிறாயா? பேய், வேறோர் தனியான ஜாதி அல்ல அப்பா ? மனிதர்களிலேயே சிலர் பேய்க் குணம் படைத்தவர்கள்தான்.

38

38