பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேகர்! [அவன் முன் மண்டியிட முயற்சிக்க, சேகர் தடுத்து விடுகிறான்.) சேகர்! என்னை மன்னித்துவிடு! சுசீலா, தியாகியின் திருக் குமாரி,தன்னையும் தியாகம் செய்கிறாள், என் பொருட்டு. சேகர்: (உருக்கமாக) தியாக சுபாவம் எனக்கும் உண்டு. பரிதாபம். சித்திரவதைக்கு ஆளானீர். என் சுகம் போனால் இல்லை. சுசீலா, என் இருதயத்தில் எப்போதும் கவலை இருப்பாள். அழாதீர் தேவரே! நான் சுசீலாவைத் தியாகம் செய்யத் தீர்மானித்துவிட்டேன். சுசீலா எங்கே? அவளை நான் பார்த்துவிட்டுப் போக வேண்டும். நான் பொழுது விடிவதற்குள், ஊரைவிட்டுச் சென்றுவிடுகிறேன். [சேகரின் கைகளை எடுத்துத் தேவர் தம் கண்களில் ஒத்திக்கொண்டு, மாடியைக் காட்ட, சேகர் மாடிக்குச் செல்கிறான்.] காட்சி 35 இடம்:-தேவர் வீட்டு மாடி. இருப்போர்:-சுசீலா, ரத்னம். (பிறகு ) சேகர், தேவர். [கட்டிலின் மீது சுசீலா உட்கார்ந்துகொண்டிருக் கிறாள் கவலையுடன். ரத்னம், அரைத் தூக்கத் துடன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான்.) தூங்கிவிட்டானா ஒரு சமயம். இருக்காதம்மா! நீ கவலையில் கவனிக்கவில்லை. எனக் குப் பேச்சுக் குரல் கேட்டதே. சு : பாதகன் பேசிப்பேசி என் அப்பாவின் உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறான், [காலடிச் சத்தம் கேட்கிறது.)

71

71