பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு: (கட்டிலைவிட்டு எழுந்து நின்றுகொண்டு ) ரத்னம் ! வா,வா? அதோ வருகிறான்; சொன்னது ஞாபகமிருக்கட்டும் -- ஆரம்பி.... ர: (கூச்சமடைந்து) சங்கடமாக இருக்கிறதம்மா, A சு: ஐய்யோ! கடைசியில் காரியத்தைக் கெடுத்துவிடுவாய் போலிருக்கிறதே. சு: [அவன் கையைப் பிடித்து இழுத்துத் தன் தோள் மீது வைத்து, அணைத்துக்கொண்டிருப்பது போல பாவனை செய்கிறாள். காலடிச் சத்தம் மேலும் பலமாகிறது. ஏதாவது பேசும்படி ரத்னத்துக்கு ஜாடை காட்டுகிறாள்.] சுசீலா! கண்மணி! (கொஞ்சும் குரலில்) நாதா ! நாம் இருவரும் [காலடிச் சத்தம் நிற்கிறது] சு: அந்தக் காமுகன் ஜெமீன்தாரன் நமது காதலைத் தடுக்க முடியுமா? அவனுக்கு நான் யாரைக் காதலிக்கிறேன் என்பதே தெரியாது. நான் யாரோ ஒரு டாக்டரைக் காதலிப்பதாக நம்புகிறான். மோசக்காரி ! வஞ்சகி ! (காலடிச் சத்தம் மீண்டும்] ஒவ்வோர் இரவும் என் நாதன் இங்கே வந்துபோவது தெரியாது. [சுசீலா தன் கைகளுக்கு முத்தமிட்டுக் கொள்கிறாள். அறைக்கதவு தடால் என்று உதைக்கப்பட்டு, சேகர் பாய்ந்துவருகிறான் உள்ளே. காட்சியைக் காண்கிறான், தலை சுழலுகிறது.) சு : (தன்னெதிரே சேகர் வந்திருப்பது கண்டு மிரண்டு) ஐயோ! தாங்களா...... (ரத்னம், சுசீலாவைப் பிடித்து இழுத்து அணைத்துக் கொள்கிறான். முரட்டுத்தனமாக, அவளை இழுத்துக்கொள்கிறான். ] 72 ர : பயப்படாதே சுசீலா! பார்த்துவிட்டால் என்ன? தலையா

போய்விடும்?

72