பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 40 இடம் :- பாதை. இருப்போர் :--ரத்னம், சேகர். (இருவரும்,எதிர்எதிர்ப்புறமிருந்து ஓடி வருகிறார்கள்] ஆபத்து இல்லையே ! சே: இல்லை ! விஷம் என்னிடம் இருக்கிறது. ர: தப்பினாள் என் தங்கை. சரி, சேகர், இனி என்ன செய்ய வேண்டும், சொல்லு. சுசீலாவின் வாழ்க்கையைக் கெடுக்கத் துணியும் அந்த ஜெகவீரனின் தலையைக் கொண்டுவந்து உன் காலடியில் வைக்கட்டுமா? கொலைக் குற்றத்துக்கு மரணதண்டனை தருவார்களே என்று பயம் கொள்ளாதே. பாம்பு கொல்லப் பட்டது என்று திருப்திகொள். ஒரு குடும்பத்தை இவ்வளவு கொடுமைக்கு ஆளாக்கும் கொடியவனை விட்டு வைக்கக்கூடாது. என்னைப்பற்றிக் கவலைப்படாதே. நான் எதற்கும் தயார்!! வீர சே: (ரத்னத்தைத் தழுவிக்கொண்டு) இவ்வளவு புருஷனாக இருக்கிறாய். சமூகக் கொடுமையால், நீ இந்தக் கதிக்கு ஆளாக்கப்பட்டாய். என்று 'ஜெகவீரர்களாகவே அது கிடக்கட்டும் சேகர், நீ என்ன சமூகம் சமூகம் பேசிக்கொண்டிருக்கிறாய். சமூகத்தின் பிரமுகர்கள், இருக்கிறார்கள். நாங்கள் சாக்கடைப் புழுக்கள். ஆனால், அந்தச் சாக்கடை ஏற்பட்டதற்குக் காரணம், கனதனவான்கள் உற்பத்தி செய்யும் காமச்சேறு. அது ஒழிய வீரர்கள் தோன்றவேண்டும். விடிவதற்குள் முடிகிற காரியமா அது. இப்போது நடக்கவேண்டியதைச் சொல்லு, சே: ஜெகவீரனைக் கண்டுபிடித்து, அவனிடம், ஒரு படம் இருக்கிறது. தேவர் கொலை செய்தவர் என்று ரூஜு காட்ட அதனைக் கைப்பற்றிவிட வேண்டும். ர: புறப்படு. சே: எங்கே கண்டு தேடுவது அவனை.

பெரிய குடிகாரனாயிற்றே.

82