பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13

 உள்ளது. படிப்படியாக, இந்நிலையினைச் செம்மைப்படுத்த அரசு முனைந்து பணியாற்றி வருகின்றது. ஆண்டு பல ஆகக்கூடும் அடிப்படைத் தேவைகளேயேனும் அளித்திடு வதற்கு. அதற்கே பொருள் சந்திட வேண்டியுள்ளது. அதுவும் எந்நிலையில், இப்பொருளை பெறுகின்றோம், தருகின்றோம் என்பதனை எண்ணிப் பார்த்திட வேண்டும்.

முழு வயிறு காணாதோர், முதுகெலும்பு முறியப் பாடுபடு வோர், வாழ்வின் சுவை காணார், வலியோரின் படைக் காய்கன், ஒடப்பர் ஆகிய இவரெல்லாம் தருகின்ற வரிப் பணமே கோட்டையாய், கொடிமரமாய், பாதையாய், பகட்டு கனாய், அமுல் நடத்தும் அதிகாரிகளாய், அறிவு பெற அமையும் கூடங்களாய்ந் திகழ்கின்றன. வியர்வை பணமாகிறது ; வரியாகப் பெறப்படுகிறது. அதனைக் கொண்டே பல்கலைக்கழகம் முதல் தொடக்கப்பள்ளி வரை கட்டப்பட்டுள்ளன. செயலில் ஈடுபடுவதே இத்துணைத் தந்திடும் ஏழையர்க்கு, நாம் காட்டும் நன்றியறிதல் என்றறிவர். அது மாணவர் உலகில் புதியதோர் திருப்பத்தினைத் தந்திடும்.

கனவு காண்கிறனே ? இல்லை. மாணவர் நினைப்பு அறிந்து கூறுகிறேன். எதிர்காலம் அவர்களுடையது. எத்தகைய தியாகக் கோட்டமாக இந்நாடு இந்நாளிலுள்ளது என்பதனை எத்துணை ஏழ்மைக்கிடையில் இந்நாட்டு மக்கள் தாம் பெற்றிராத பெரிய வாய்ப்பினை நமக்களிக்கின்றார் என்பதனை மாணவர் உணர்ந்திடின் - அவர் உணர்வர் - அவர்களுடைய பொறுப்புணர்ச்சி மிகுந்திடும். ஏற்புடைய செயலினால் அதனை இருளற்றதாக்கி விடுவது அவர்கள் பொறுப்பு அதற்கான ஆற்றல் மிக்கோர் அவர்கன். இஃது என் நம்பிக்கை.

7

ஒவ்வொரு நாட்டிலும் சிறப்பு மிக்க கட்டங்களில் மாணவர் முன்னணியில் நின்று பணிபுரிந்தனர் என்பதனை வரலாறு காட்டுகின்றது. இன்று மாணவர்களாக நீவிச் இருந்திடும் காலம் நமது நாட்டின் புதிய வரலாறு எழுதப்படும் காலமாகும். கடினமாக உழைத்தால் மட்டுமே