பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10

 மூட நம்பிக்கைக்கு எதிராகவோ, அறிவியலுடனே பல்வகைப்பட்ட கொடுங்கோன்மைக்கு எதிராகவோ சாதி இணைந்தும் பிணைந்தும் இருக்க இயலாது. விடுதலை, சரிநிகர்நிலை, உடன்பிறப்புத்தன்மை ஆகியவற்றுடன் கொடுங்கோன்மையின் பல வகைகள் இணைந்திருக்க இயலா.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ வகைகளைக் காண முயலும் போது, சமூகத்திற்குரிய உங்கள் கடமையினையும் நீங்கள் ஆற்றவேண்டியுள்ளிர்கள். பகுத்தறிவுப் பகலவன்களாக ஆகவேண்டும் நீங்கள் !

பகுத்தறிவு என்பது அடிப்படை உண்மைகளையும் வெளிப்படை உண்மைகளையும் மறுதலிப்பதன்று. ஆனால், எண்ணம், செயல், ஆகியவற்றில் உள்ள ஐயுறவுநிலைகளே அழிப்பதாகும் அஃது. நூற்றாண்டுக் காலமாகப் படிந்துள்ள சிலந்திக் கூடுகளை நீக்க வேண்டியுள்ளதால், துணிச்சலுடன் சலிப்பில்லாமல் உழைத்துப் பகுத்தறிவினைத் தலையாய நிலையில் நீங்கள் அரசோச்சச் செய்யவேண்டும்.

நம் காலத்தின் மற்றொரு விந்தையான இயல்பு, நாடு என்னும் வடிவம் பெறும் நிலையில் நாம் உள்ளோம் என்பதாகும். தங்களுடைய அளவுக்கு மீறிய ஆவலினால், ஒருமைப்பாட்டை உருவாக்கச் சிலர் ஒற்றுமையை ஒரு சீர்த்தன்மையோடு குழப்புகின்றனர். இங்குப் பயிற்சி பெற்றவர்களின் கடமை, தெளிவாக நெறிமுறையினை விளக்கி, ஒற்றுமை என்னும் பெயரால் நாட்டின் எப்பகுதியும் அறிந்தோ அறியாமலோ மற்றொரு பகுதிக்குக் கீழ்ப்படியும் நிலையில் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதாகும். இலக்கு எவ்வளவு தான் உயர்ந்ததாக இருந்தாலும், நேர்மை தவறிய நடப்புக்கு நாம் உடந்தையாக இருக்க இயலாது.

விடுதலை அடையு முன் தனக்கே உரிய அறிவுக்கூர்மையுடன் ராஜாஜி கூறியதாவது: "உண்மையில் நம் அரசியல் ஆய்வு, உருகும் இரும்பினையும் உலோகங்களையும் புடக்குகையில் ஊற்றி உலோகக் கலவை செய்வது போன்றதாகும்'. உலோகக்கலவை அழிவுதேய்வினைத் தாங்வல்லது. மற்ற