பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முத்தமிழ்

முக்கனி படைத்த நாடு, முத்தமிழ் படைத்த நாடு, முத்தமிழால் முன்னேற — மறுமலர்ச்சி பெற முத்தமிழைப் போற்றுங்கள்! முத்தமிழை முன்னேற்றப் பாதைக்குப் பயன் படுத்துங்கள்!...

***

தமிழ்மொழி மூலம், முத்தமிழ் மூலம், தமிழரது வாழ்வில் மாறுதலையுண்டாக்கிட முடியும் - நிச்சயமாக.

***

தமிழர், தம்மின மொழியை, தமிழ் மொழியைப் பெரிதென மதித்துப் போற்றி, புகழ்ந்து, பரப்பிடும் நிலைமை, மறுமலர்ச்சி, தமிழின் மறுமலர்ச்சி பூத்துக் குலுங்கி வரும் இந்த நேரத்திலேதான் இந்தச் சூழ்நிலையில் தான், தமிழரை, தன்மானமுள்ளோராக நாகரிக மாந்தராக, நல்ல வாழ்வு நடத்திடும் மனிதராக மாற்றமுடியும்.

***

தமிழன் தமிழைப் படிக்கத் தொடங்கி விட்டான்; தமிழைப் போற்றத் தலைப்பட்டு லிட்டான்-தமிழருக்குத் தனிப் பெருமை, தனது மொழிக்கு. தன் தாய்- மொழிக்குத் தனது பணியைச் செய்திட முன் வந்து விட்டான். நாடெங்கும் தமிழ்த் திருநாட்கள், முத்தமிழ் முழக்கங்கள் நடைபெறும் நன்னாளைக் காண்கிறோம் இன்று!

***

அடி மறைந்த தமிழ்ப் பெரியார் மறைமலை களாரும், தள்ளாத வயதடைந்தும் தளராது, தமிழ்த் தொண்டு செய்து வரும் தமிழ்ப் பெரியார் திரு.வி. கலியாணசுந்தரனார் அவர்களும், தமிழ்ப் பற்றை