இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
56
படைதிரண்ட தமிழ்மக்கள் ஆர்வத் தாலும்
பட்டாளம் போல்வந்த பான்மை யாலும்
மடைதிறந்த வெள்ளமென எதிர்ப்ப லைகள்
மளமளென வீசிவந்த வேகத் தாலும்
கடைவிரித்த இந்தியினைக் கொள்வா ரின்றிக்
கண்மூடி, வந்தவழி அனுப்பி வைத்தார்!
உடைதரியாத் தளபதியாய் ஆனார் அண்ணா;
ஒப்பில்லாச் சிறைவாசம் முதலாய் ஏற்றார்!
ஆணவத்தால் பள்ளிகளில் இந்திப் பாடம்
அமைத்திட்டார் அந்நாளின் முதல மைச்சர்;
வீணடித்தார் கல்வியினை: தமிழ ழிக்க
வீராப்புக் கொண்டிட்டார் என்ற றிந்து
காணரிய பேரெதிர்ப்புக் காட்ட லானார்
தனித்தமிழர் அணிதிரண்டார்; படையும் கண்டார்!
ஆணரசன் அழகிரியும் அறமூ தாட்டி
அம்மைஇரா மாமிர்தம் தலைமை தாங்கப்