பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

அண்ணா—சில நினைவுகள்


அமெரிக்க மக்கள் எவ்வளவுதான் செல்வந்தரா யிருப்பினும், இருப்பதுடன் மனநிறைவடையாமல், மேலும் செல்வத்தைத் தேடி அலை வார்கள் என்பதே மய்யக் கருத்து. அவர்களுக்கு வாழ்வின் இன்பங்களைத் துய்க்கத் தெரியாது. காதல், மணவாழ்க்கை, மக்கட் பேறு இவற்றையெல்லாம் உணர்ந்து சுவைக்க நேரமின்றி, விரைவில் அழியும் பொருட் செல்வத்தை நாடி, நிம்மதி இழந்து தவிப்பார்கள்.

காதல் வயப்பட்டாள் ஒரு பெண். காதலனுடன் வாழத் துவங்கும் போது அவன் மறைந்து விடுகிறான். பிறகு வேறொருவனை மணக்கிறாள். அவனோ, கண வனாக இருந்து கடமை ஆற்றாமல், பொருள் நாடி மடிகிறான். அடுத்து ஒருவன்! மீண்டும் வேறொருவன்! ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளில் மாண்டு போகிறார்கள். ஆனால் இவளுக்கோ அவர்கள் விட்டுச் சென்ற செல்வம் மலை மலையாய் வந்து குவிகிறது. கடைசியில், யாவற்றையும் துறந்த ஏழ்மை நிலையில் தான் அவள், வாழ்க்கை இன்பங்காண்கிறாள்!

கதை சொல்லி முடிக்க அரை மணி நேரம் ஆனது. அண்ணா அப்போது, தமது காஞ்சி வார இதழில், சில நேரங்களில் சில் கட்டுரைகளை, இப்போது புதுக்கவிதை என்கிறார்களே அது போன்ற புதிய நடையைத் தாமே உருவாக்கிக்கொண்டு-அந்த நடையில் எழுதுவதை வழக்க மாக்கியிருந்தார்கள். இந்த சினிமாக்கதை முழுவதையும் அதே நடையில் டெல்லியிலேயே எழுதினார்களாம். அதில் ஏனோ தெரியவில்லை-அவர்களுக்கு மனநிறைவு ஏற்படவில்லையாம். மாயூரம் சென்றவுடன் கருணானந்தத் தைப் பிடித்து, அவருடைய கவிதை வடிவில் எழுதச் சொல்ல வேண்டும் எனத் தீர்மானித்து, மறவாமல் அந்தத் தாள்களைத் தம்முடன் எடுத்து வந்துள்ளார்களாம்.