பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

அண்ணா—சில நினைவுகள்


பார்த்துவந்த பின்புநான் பாடம் மறக்கவில்லை!
“செல்வத்தைத் தேடித் திரிவதால், ஒடுவதால்,
பல்விபத்தும், பாழும், பயனில்லா வாழ்வுமே
சித்திக்கும் என்று, சிரிப்பூட்டும் நற்படத்தில்
தித்திக்கும் நன்மருந்து சிந்தனைக்கும் தந்தாரே!
ஆளுந் திறனென்ன அற்புதமாய்-என்றெண்ணி
நாளும் மகிழ்ந்திருந்தேன் நன்கு.
-இது நான்.

அண்ணாவின் கையெழுத்துப் பிரதிகளைப் பத்திரமாக வைத்துக்கொண்டு, நான் எழுதிய கவிதையை அடுத்த வாரமே சென்னைக்குப் போய் அண்ணாவிடம் தந்தேன். ஆனால் அதற்கும் அடுத்த முறை சென்னை சென்றபோது “கருணானந்தம், உன் கவிதையை எங்கேயே misplace செய்துட்டேன். வேறு எழுதித்தாய்யா, முடியுமா?” எனக் கேட்டார்கள். “ஒரிஜினல் மாயூரத்தில் வைத்திருக்கிறேன். அண்ணா. போனதும் எழுதி எடுத்து வருகிறேன்” என்று சொல்லி, மீண்டும் வேறொரு நகல் எழுதித் தந்து, அது 1966 “காஞ்சி” பொங்கல் மலரில் ‘செல்வத்தைத் தேடி’ என்ற தலைப்பில் வெளியாயிற்று. அந்தப்படத்தின் பெயர்” What a way to go. நீண்ட நாள் கழித்துச் சென்னையில் பார்த்தேன்.

நான் எழுதிக் கொடுத்தேனே தவிர, அண்ணா எழுதியது மிகவும் அருமையாக இருந்ததால், அதை எப்படிப் பயன்படுத்தலாமென யோசித்து வந்தேன். நல்வாய்ப்பாக அதைப் பாதுகாப்பாக வைத்திருந்தேன். அதனால், 1970-ஆம் ஆண்டில், என் இரணடாவது கவிதைத் தொகுப்பான “கணியமுது” நூலில், அண்ணாவின் எழுத்தோவியத்தை ஒருங்க்கமும், அதற்கு மாற்றாக நான் எழுதியவரிகளை எதிர்ப்பக்கமும் வெளியிட்டேன். ஒவ்வொன்றும் 32 பக்கங்கள் வந்தன.