இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
168
அண்ணா—சில நினைவுகள்
“கருணானந்தம் தந்துள்ள கவிதைகாட்டுதல் போல்” என்ற தமது முகப்பு வரிகளுடன், என்னுடைய இந்தக் கவிதையிலிருந்து முதல் எட்டு வரிகளை மட்டும் எடுத்து, மேற்கோளாகக் காட்டியிருக்கிறார்கள்!
“அது சரி அண்ணா! நீங்கள்-முன்னே சொன்னிங்களே - ‘அத்தான்’ என்று ஆரம்பிச்சாலும் திராவிட நாடு வேண்டும்’னு முடிக்கிறதாக-அது எந்தக் கவிதையைப் பார்த்ததும் உங்களுக்குத் தோணிச்சுது அண்ணா? என்று கேட்டேன்.
“ஏன்? எத்தனையோ இருக்குதே! உதாரணமா, 1960 ‘திராவிடநாடு பொங்கல் மலரி’லே வந்த உன் கவிதையைத் தான் பாரேன்’ என்றார்கள் அண்ணா. எடுத்துப் பார்த்தேன். அது இதுதான் :
- நள்ளிரவில் மாளிகையின் பின்முற் றத்தில்,
- நடுக்குகின்ற குளிர் தாக்கப் போர்த்துக் கொண்டு
- வெள்ளிநிலா ஒளிவழங்க, விண்மீன் கூட்டம்
- விசிறிவிட்ட வைரமென மின்னல் காட்டத்,
- துள்ளிவரும் சிந்தனையின் அலைகளாலே
- துயில்கெட்டுப் புரளுகையில், துணைவி வந்து...
- பள்ளியறைக் காவியத்தைப் பாடு தற்குப்
- பாங்கான நேரமென்று துவங்கி விட்டாள்:
- “ஏனத்தான், எத்தனையோ கால மாக
- எனக்காகக் கேட்டேனே, புடைவை எங்கே?
- மானத்தை மறைப்பதற்குத் துகில் என் றாலும்,
- மனங்கவரும் பட்டாடை அணிந்தா லென்ன?
- வீணத்தான் பெட்டிகளில் பூட்டி வைத்தல் :
- விரும்புவதை எடுத்தளிப்பீர்! நான்தான் உம்மை
- வானத்தை வில்லாக்கித் தரச்சொன் னேனா !
- வைத்திருக்கும் பொருள் தந்தால் வறண்டா போகும்?