3
வர்கள் உழவர்கள்—பணிமனையினர், உழவர் அளவு இல்லை—அதற்கு அடுத்த நிலையினர். இந்த மூன்று வகையினருக்கும் இன்று, வாழ்க்கைத் தரமும் தொழில் முறையும் அமைந்திருக்கும் நிலை, உண்வையான ஓய்வு, உள்ளத்துக்குப் புதிய உற்சாகம் தரக்கூடிய ஓய்வு கிடைப்பது கடினம். ஒரு சிலருக்குக் கிடைக்கும் ஒய்வையும், தக்க விதத்திலே பயன்படுத்திக் கொள்ள மனவளமும் குறைவு, பணபலம் அதைவிடக் குறைவு.
இயற்கை நம்மைத் துரோகம் செய்துவிடவில்லை. மற்ற நாடுகளிலே உள்ளதைவிட, இயற்கை வளம் இங்குக் கண்டவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் தொழில் வளம், தொழில் திறம்போதுமான அளவு பெருகாததால் தரித்திரம் தாண்டவமாடக் காண்கிறோம். புதிய முறைகளையும் கருவிகளையும் கொண்டு, இயற்கை வளத்தைப் பயன்படுத்துவதிலே மற்ற நாடுகளைவிட நாம், மிகப் பின்னணியில் இருப்பதால், இங்கு, சுவையற்ற, கவைக்குதவாத வாழ்க்கையை நடத்துவதற்கே மிகப் பெரும்பாலான மக்கள், மாடுடன் உழைக்கிறார்கள். மனித உழைப்பு மிகமிக அதிகமான அளவிலே செலவிடப்படுகிறது. மனிதன் பிணமாகாதிருக்க; நல் வாழ்வு பெற அல்ல முழு வாழ்வு பெறக்கூட அல்ல சாகாமாலிருக்க. ஆகவே, ஓய்வு பாட்டாளியின் வேலையின் கடினம் குறைக்கப்பட்ட பிறகுதான் பெரும்பான்மை மக்களுக்குக் கிடைக்கும். பெரும்பான்மையினருக்கு ஓய்வுகிடைத்து, அந்த ஓய்வை தக்கபடி பயன்படுத்தினால் தான் பாடுபடுவருக்கு மேலும் தொடர்ந்து பாடுபடவும், திறமையுடன் பாடுபடவும் முடியும்—பிறகு பொதுச் செல்வம் வளரும்; சீர் உண்டாகும்; நாடு செழிக்கும், இவைகள் எல்லாவற்றையும்விட, மனித மாண்பு மலரும். உழைத்தோம், வாழ்வின் பயனைப் பெறுகிறோம் என்ற களிப்பு முதலிலே ஏற்படவேண்டும். பிறகுதான் ஓய்வைச் சுவைக்க முடியும்.
வேலை மனிதத் தன்மையை மாய்க்காத அளவு—இருக்கவேண்டும்—வேலை நேரத்தை மட்டுமல்ல நான் குறிப்பிடுவது; வேலை முறை—தன்மை வேலை செய்பவனுக்கு வேலை நேரத்தில் வேலைக்குத் தேவையான வசதிகளைத் தருவது, எல்லாவற்றையும் சேர்த்துத்தான் கூறுகிறேன். வேலை மனிதனை, தேயச் செய்துவிட்டால், பிறகு கிடைக்கும் ஓய்வு வேளை ஓய்வு தராது—பாதி மனிதரால் ஓய்வு பலனைப் பெறமுடியாது.
ஓய்வு, சீமான்களாக உள்ள சிலருக்குமட்டும் உரிமையாக இருந்த காலம் உண்டு. நிலைமை இப்போது மாறி வருகிறது ஓரளவிற்கு நம்பிக்கைத் தருகிற வகையில் ஓய்வு சிலருக்கும்; ஓயாத வேலைத் தொல்லை மிகப் பலருக்கும்—என்ற முறையில் சமூக அமைப்பு இருக்கும்போது ஓய்வின் விளைவுகளாக கலை, பண்பு,