பக்கம்:அந்தித் தாமரை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.59

கொள்ளாமலே திரும்பிவிட்ட காட்சி ஏடு விரிந்தது, பொன்னம்மாவின் மனத்தில், -

‘முத்து! இனிமே நீ பூவம்மாவை மறந்துப்பிடு” என்று தழுதழுத்த தொனியில் முத்தாய்ப்பிட்டாள் பொன்னம்மா.

‘அத்தை!’ என்று ஓடிவந்து அவள் காலடியில்

வீழ்ந்தாள் சிறுமி பூவம்மா.

{

‘தம்பி, உன் தாய்மாமன்-இந்தப் பொண்ணுேட

அப்பா-இனி கமக்குப் பகையாளி, உங்க அப்பாவை

அவமானப் படுத்தி அலைக்கழிக்கப் போறரு ‘

“கூடப் பொறந்த உங்க மனசையா இப்படிக் கலங்க வச்சாங்க எங்க அப்பா?... என்ன அத்தை கடக் திச்சு...? என்று விவரம் கேட்டாள் சிறுமி.

“பூவம்மா, இதெல்லாம் ஒனக்குப் புரியா தம்மா, ங் போம்மா!’ என்றாள் பொன்னம்மா.

‘எல்லாம் புரியும்; சொல்லுங்க அத்தை!’ பொன்னம்மா விவரித்தாள்: “முத்துவோட அப்பா ஆயிரத்தைந்நூறு ரூபாய்க்குக் கிட்டத்தட்ட கடன் வாங்கினங்க, கம்ப ஊர் கண்ணுச்சாமி அம்பலத்துக் கிட்டே. அதுக்கு முத்துவோட அப்பா அந்த ஆம் பளைக்கு கோட்டு எழுதிக் கொடுத்தாங்க. ஆன, உன் அப்பா ஒருவாட்டி என் வீட்டுக்காரரைப் பொய்ச்சாட்சி சொல்ல அழைச்சதுக்கு இவங்க போகலை-அக்த வன்மத்தை மனசிலே ஊறப்போட்டு வச்சிருக்து இப்ப முத்துவின் அப்பாவை, அதான் உன் மாமனைச் சக்தி சிரிக்க வைக்கப் போருராம் உன் அப்பா. கண்ணுச்சாமி கோட்டை உன் அப்பா வாங்கி இப்போ என் மச்சான் மேலே கேசு கொடுக்கப் போறராம் விடிஞ்சதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/161&oldid=619646" இலிருந்து மீள்விக்கப்பட்டது