பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“இந்தாங்க, பிடியுங்க, அத்தான்!”

“என்ன சாபமா?” என்று சாணக்கியத் தந்திரத்தோடு கேட்டுக்கொண்டே, தமது உயிரினும் மேன்மை தங்கிய ஆருயிர் ரஞ்சனியின் தளிர்க்கரங்களைப் பிடித்துக்கொண்டார் ரஞ்சித்!

“ஊஸ்...என்னாங்க அத்தான் இப்படி..? அந்நியமானவங்களெல்லாம இருக்கிறது மறந்துபோச்சுதா?” காதும் காதும் வைத்தவிதமாகச் செல்லமாகக் கோபப்பட்டுக் கைகளையும் விடுவித்துக்கொண்ட பெருமை திருமதி ரஞ்சித்தைச் சார்ந்தது; சேர்ந்தது.

மகேஷ் குனிந்த தலையை இன்னமும்கூட நிமிர்த்தவில்லை.

ஜாடை தெரிந்துகொள்வதில் ரதி கெட்டி. ஆகவே தான, சற்றுமுன்னம் வந்து சேர்ந்த ‘மெயில்’, ‘மாலை முரசு’ பத்திரங்களில் மூழ்கிவிட்டிருந்தாள்.

பாங்கரின் அன்புக்கணக்கில் தாம்பூலமும் ஆதாயப் புள்ளியில் சேர்க்கப்படுகிறது.

“மகேஷ், பீடா எடுத்துக்கிடுங்க; உங்களுக்குப் பிடித்தமான ஸ்பெஷல் பீடாதானுங்க!” என்றாள் ரஞ்சனி. “நீங்களும் ஒண்ணு எடுங்க!” என்பதாக ரதிதேவிக்கும் குறிப்புக் கொடுத்தாள்.

“ரஞ், மகேஷூக்கும் மகேஷோட ரதிக்கும் உன் கையாலேயே தாம்பூலம் கொடுத்திடேன்!” என்று ஆலோசனை வழங்கினார் ரஞ்சித்.

ரஞ்சனி நூறு சதவீத அளவிலான எச்சரிக்கையுடன், இட்ட பணியைத் தட்டாமல் நிறைவேற்றினாள்.

நந்தினி விலாசம் உரிமையாளர்; ‘சபாஷ்!’

127