பார்த்தான்; "அம்மா, அம்மா! அது என்ன படம் அம்மா" என்று வினவினான்.
"ஓ, அதுவா? உனக்குத் தெரியாதா பாபு? அகுதான் பரசுராமர் படம்!"
"ஓஹோ! அப்பாவோட ஆணைக்கு கீழ்ப்படிஞ்சு, தப்புப் பண்ணிட்ட தாயையே வெட்டிப் போட்ட அந்தப் பரசுராமா?--- எங்களுக்குக்கூட., பரசுராமர் கதை இந்த வருஷம் பாடத்திலே வந்திருக்குது. அம்மா!"
"அப்படியா?"
ரஞ்சலியின் சமர்த்து யாருக்கு வரமுடியும்?
"அம்மான்னா அம்மாதான்! என் அம்மாவுக்கு எல்லாம்! தெரியுது!" என்று ஆனந்தப் பரவசத்துடன் பெருமை அடைந்த பாபு, அந்தப் பெருமையை நிதர்சனமாகப் பிராடவப்படுத்தும் பாவனையிலே, தன் அன்னைக்கு- அன்பும் பாசமும் கொண்ட தன் அன்னைக்குத் தன் பங்கிற்காகவும் முத்தங்களை வழங்கினான்; வாரி வாரி முத்தங்களை முத்தங்களை வழங்கினான்.
"பாபு!" ரஞ்சனி விம்முகிறாள்!
காலடி ஓசை கேட்கிறது.
ரஞ்சித் ஏறிட்டு விழித்தார்.
"நாங்க புறப்பட்றோமுங்க, மிஸ்டர் ரஞ்சித்!" என்றார் மகேஷ்-ரதி சகிதம் நின்ற மகேஷ்.
"எங்கே புறப்பட்டுட்டீங்க?"
"ரதியோட சினிமா ஸ்டார் சிநேகிதி பங்களாவுக்கு!- அங்கே போயிட்டு, அப்படியே ராத்திரிக்கே நாடு போகவேணுமுங்க!" என்றார் மகேஷ்.