பூவை எஸ். ஆறுமுகம்
67
வேணும். அவன் இங்கே இனி இருக்கப் போறது நாள் கணக்குத் தாண்டா!... உன்னையும் என்னையும் கூட அவன் பட்டணத்துக்கு அழைச்சுக்கிட்டுப்போய்த் தன்னோட பங்களாவிலே வச்சுக்கிடப் போறதாச் சொல்லியிருக்கானே!...” என்றான் அப்துல்லா.
இவர்களின் சம்பாஷணை முடிவதற்கும் ஜெயராஜ் அங்கு வருவதற்கும் கனகச்சிதமாக இருந்தது.
“முதலாளி அய்யர் கூப்பிடுகிறார் உன்னை!” என்றான் உமைபாலன், ஜெயராஜிடம்.
அவனோ வெகு அலட்சிய பாவத்தோடு, “ம்...சரிடா நீ போ!” என்றான்.
உடனே இதைக்கேட்டதும் உமைபாலனுக்குக் கோபம் வந்துவிட்டது. “டே பட்டம் போடறியா?...ரொம்பத் திமிர்தான்! உன் பணக்கொழுப்பை எங்கிட்டவா காட்டறே?...” என்று முஷ்டியை ஓங்கினான்.
ஜெயராஜ் அதற்குள் அசந்துவிட்டான். “வீட்டிலே கூப்பிட்டு கூப்பிட்டுப் பழக்கமாகப் போச்சுப்பா! கோபிக்காதே!” என்று பவ்யமாகக் கெஞ்சினான்.
உமைபாலன் கோபம் ஆறினான்.
இருவரும் வெளிப்புறம் வந்து நின்றார்கள்.
“சாப்பாட்டுக்கு நேரமாயிடுத்து... உள்ளே டேபிள், நாற்காலியையெல்லாம் செட்டிலாப் போட்டாச்சாடா?. ஆத்திலேருந்து வந்ததுகளையும் உள்ளவே போட்டுடனும்டா!” என்றார் முதலாளி.
“ஆத்திலேருந்து மேஜை–நாற்காலி கூடவா வரும்?” என்று ஜெயராஜ் ‘ஜோக்’ அடிக்க, மற்றவன் ரசித்தான்.