பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தப் புத்தகத்திலுள்ள கதைகளைப் படிக்க ஆரம்பிக்குமுன் உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். அற்புதமான கதை. ஆனால் உண்மைக் கதை.

வெகுகாலத்துக்கு முன்னே ஓர் ஏழைப் பையன் வாழ்ந்து வந்தான். அவன் அப்பா செருப்பு, பூடஸ்கள் தைப்பவர். ஒருநாள் அந்தப் பையனுக்கு அந்நாட்டு இளவரசரின் பேட்டி கிடைத்தது. பையன் ரொம்பச் சூட்டிகை. இளவரசரின் முன்னால் ஆடினான், பாடினான் அவனது ஆடல் பாடலைக் கண்டு மகிழ்ந்த இளவரசர் “பையா உனக்கு என்னவேண்டும்”? என்று கேட்டார். பையன் சொன்னான், "நான் அழகழகான நாடகங்கள் எழுத விரும்புகிறேன். அவைகள் அரசாங்க நாடகமேடையில் அரங்கேறுவதைக் கண்டு மகிழவேண்டும் என்று.

இளவரசர் அந்தத் துணிச்சல்காரப் பையனை வியப்போடு ஏற இறங்கப் பார்த்தார். பெரிய குடமிளகாய் மூக்கு, பரிதாபம் சொட்டும் கண்கள், இளைத்த உடல், ஏழ்மையின் சின்னம். இளவரசருக்குச் சிரிப்பு வந்தது. "தம்பி உன் நிலைமைக்கு ஏற்றவாறு ஆசைப்படு. உருப்படியாக ஏதாவது தொழில் செய்து பிழைக்கும் வழியைப் பார். தச்சுவேலை செய்யக் கற்றுக்கொள்ளேன்" என்றார்.

ஆனால் அந்த அசட்டுப் பையன் அவர் சொன்னபடி கேட்கவில்லை. வீட்டுக்கு ஓடினான். தன் சேமிப்பு மண்கலய உண்டியலை உடைத்தான். சிதறிய காசுகளைச் சேர்த்து அள்ளிக்கொண்டு "அம்மா, நான் அதிர்ஷ்டத் தைத் தேடிப் போகிறேன் ' என்று கிளம்பிவிட்டான்.

அவன் அப்பா இரவு நேரங்களில் அவன் அம்மாவுக்கு அராபுக் கதை களைச் சொல்லுவார். அம்மாவுக்கு அதில் ஈடுபாடு கிடையாது. ஆனால் இந்தப் பையன் அந்தக் கதைகளை உன்னிப்பாகக் கேட்டு அதில் லயித்துப் போவான். இப்படிக் கதை கேட்பதில் நாட்டங்கொண்ட இவன் அதிர்ஷ் டத்தைத் தேடிக் கிளம்பியபோது இவனுக்குக் கைகொடுத்து உதவியது கதை சொல்லும் கலை, வாழ்க்கையில் முன்னேற என்னென்னவோ தொல்லைகளை அனுபவித்தாலும் இவன் குழந்தைகளுக்குக் கதை சொல்லுவதில் இன்பங் கண்டான். இவன் எங்கு சென்றாலும் குழந்தைகள் இவனைச் சூழ்ந்துகொள்வார்கள். இவன்மீது ஏறித் தொத்திக்கொள்வார்கள். "ஒரு கதை சொல்லு" என்று கெஞ்சுவார்கள். சொன்ன கதைகளையே மறுபடியும் மறுபடியும் இவன் கூறினாலும்கூடக் குழந்தைகளுக்கு அவைகளைக் கேட்பதில் அலுப்பே ஏற்படுவதில்லை. அத்தனை அற்புதமாகக் கதைகளைச் சொல்லத் தெரிந்திருந்தது அவனுக்கு. குப்பைக் காகிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு அதுவே கூறுவதாக ஒரு கதை சொல்லுவான். ஒரு குழந்தையின் கையிலுள்ள உடைந்த பொம்மையைக் கண்டதும் உடனே ஒரு கதை பிறந்துவிடும். உடைந்த பாட்டில், சாக்கடை நீரில் மிதந்து செல்லும் பிய்ந்த ரப்பர் பந்து எல்லாமே இந்தப் பையனின் கற்பனையில் கதாநாயகர்களாகிவிடும். ༢་༡

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னப்_பறவைகள்.pdf/3&oldid=1542195" இலிருந்து மீள்விக்கப்பட்டது