பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

அன்னை கஸ்தூரிபாயின்



மறுநாள் காலை பத்தேமுக்கால் மணியளவில் வெள்ளைக் கதர் புடவை கட்டி, நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டு, கிச்சிலி நிறப்போர்வையால் அன்னையின் உடலைப் போர்த்தி மூடினார்கள். மலர்களால் அலங்கரித் தார்கள். பிள்ளைகளும், உறவினர்களும் மயானத்துக்குக் கொண்டு சென்று கஸ்தூரிபாய் உடலைத் தகனம் செய்தார்கள். இறுதிச் சடங்குகளை இளைய மகன் தேவதாஸ் காந்தி செய்தார். அப்போது சுமார் நூறு பேர் கூடியிருந்தார்கள்.

கஸ்தூரிபாய் சடலத்தைச் சிதையில் வைத்த போது மகாத்மா காந்தியடிகள் போர்வையால் தனது முகத்தை மறைத்துக் கொண்டு அழுதார். கீதை, குரான், பைபிள் முதலிய சமய நூல்கள் ஓதப்பட்டன. காந்தி அடிகளும், கஸ்தூரிபாயும் தங்கள் மக்களுள் ஒருவராகப் போற்றிய மகாதேவ தேசாய் சமாதிக்கு அருகிலேயே கஸ்தூரிபாய் அடக்கம் செய்யப்பட்டார்.

அன்னை கஸ்தூரி பாய் சமாதி மீது மகாத்மா காந்தியடிகள் தம்முடைய கைகளால் சிறுசிறு சங்குகளைக் கோர்த்து, ஹேராம் என்று எழுதினார் கஸ்தூரி பாய் சகாப்தம் முடிந்தது.

xxx