பக்கம்:அன்னை தெரேசா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 அன்னையின் அன்புப் பணி இயக்கத்திற்குத் தங்களையே அர்ப்பணம் செய்து கொள்ள மனமுவந்து முன்வந்த அன்புப் பணிப் பெண்களின் எண்ணிக்கையும் வளரலா யிற்று. ஆகவே, - மழைத்துளிகளுக்காக ஏங்கித் தவித்த சக்கரனாகப் புட்களென, அன்பைத் தேடி அலேந்து திகித்து, விதி வழியே, வீதிகளின் வழிகளில் சுற்றிச் சுழன்று, தறி கெட்டும் வசம்கெட்டும் தவித்து உருகிக் கொண்டிருந்த கடையரினும் கடையரைத் தேடியும் நாடியும் செயற் பட்ட அன்புப் பணிமுறைகளும் பெருகலாயின. அன்னே தெரேசா, சுழல்கின்ற உலகத்திலே, வினே யின் சூழலிலும் விதியின் சுழலிலும் சிக்கித் தவித்து, அல்லற்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஏழை மக்களில் மிக மிக ஏழைகள் எல்லோருக்குமே அன்னே" அல்லவா?-ஆகவேதான், வாழ்க்கையிலே கடையரினும் கடையரான ஏழை எளியவர்களைப்பற்றியும், சமுதாயத் திலே புறக்கணிப்பட்ட அபலைகளைக் குறித்தும், கேட் பாரற்றும், கவனிப்பாரற்றும் கிடந்த அளுதைக் குழந்தைத் தெய்வங்கள் சம்பந்தமாகவும் அவர் ஓயாமல், ஒழியாமல் சிந்தித்தார்; சிந்தித்தார்; சிந்தித்துக் கொண்டே யிருந்தார். : . நாட்கள் நடந்தன. தெரேசா, இப்போது இலட்சியப் பூக்கள் வண்ணமும் வனப்பும் மணமும் நிரம்பிப் பூத்துக் குலுங்கிப் புன்னகை செய்து கொண்டிருந்த அழகானதோர் ஒற்றைகரம் விதி, விதியிலும் விளையாடாதா? ஒரு நாள்: ‘. . . . . . அன்னை தெரேசா வீதிவழியே, விதிவழி நடந்து போய்க் கொண்டிருக்கிருர், காலே இளம் பரிதியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/75&oldid=736389" இலிருந்து மீள்விக்கப்பட்டது