அன்பு மாலை
வெல்லற் கரிய பொறியெலாம்
வென்றவன் வீரனெனச்
சொல்லும் பெரியவன் ராம
சுரத்குமார் சோர்விலனே.
ஞானம் தோற்றும் அக்கால் சுகபோகம் புல்லும் -ஞானம் உண்டாகும் போது ஆன்ம இன்பம் கிடைக்கும்.
விண்ணை அளந்திடும் பேருண்டோ? இந்த மிளிர்புவியில்
தண்ணீர் அலையைக் கணக்கிடு வாருண்டோ? தாழ்நதியில்
நண்ணு மணலுக்கோர்எண்ணுமுண் டாமோ நயந்துசொலின்
அண்ணலெம் ராம சுரத்குமார் சீருக் களவுமின்றே.75
விண்ணை - ஆகாசத்தை.
தாபம் கெடுக்கும் மருத்துவன், மாயைத் தழல் தருசந்
தாபம் கெடுக்கும் அருள்நீரைப் பாய்ச்சும் தனிமுகிலன்,
கோபம் கெடுக்கும் குருபரன், வஞ்சக் குழிகெடுக்கும்
பூபன்எம் ராம சுரத்குமார் என்னப் பொலிமுனியே. 76
தாபம் - மூன்று வகைத் தாபங்களை. சந்தாபம் - துன்பம்
மாயை வலையில் பட்டுமா ழாந்து மதிமயங்கி
ஆய கடமை இதுவென வேயறி யாதமக்கள்
தூயனாம் ராம சுரத்குமார் தன்னிடம் துன்னிவிட்டால்
மேயநல் ஞானம் வெளிப்படும்; இன்ப விளைவுறுமே. 77
இன்பமே ஆயினும் துன்பமே ஆயினும் ஏதுறினும்
அன்புடை நெஞ்சம் சிறிதும் கலங்காத அற்புதனாம்,
தன்மை இதுவென் றுரைக்கஒண் ணாத தயாநிதியாம்
நன்னயன், ராம சுரத்குமார் என்கின்ற நற்றவனே ! 78