பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

________________

18 கிறது. இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமணங்களுக்குச் சட்டத்தின் பாதுகாப்பும் ஏற்பட்டு விட்டது. இதுவரையில் நாம் சட்டம் ஒப்புகிறதா? இல்லையா என்பதைப்பற்றி கவலைப்படவில்லை. சமூகம் ஒப்புகிறதா? மக்கள் மனம் திருந்துகிறார்களா? என்பதை மட்டுந்தான் கவனித்துச் சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வந் தோம். நாம் எதற்கும் அஞ்சாது தொடர்ந்து இத்தகைய பணியினைச் செய்து வந்ததன் பயன் தான் இப்பொழுது சட்டம் நம்மைத் தேடி வந்து நமக்குப் பாதுகாப்புத் தரும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதே முறையில் நம் நாடு முழுவதும் பேசியும்,எழுதி ; யும் பிரசாரம செய்து வந்த மற்றொரு காரியமும் இன்று சட்டமாகியிருக்கிறது. காம்தான் கேட்டோம் முதன்முத லில் ஒரு ஆண் பல மனைவிகளை மணந்து கொள்வது நியா யமா? என்று. அவனுக்கென்ன ஆண் மகள்! ஒன்றென்ன ஒன்பது மனைவிகளைக்கூடக் கட்டி ஆளலாம்! என்று பெருமை பேசி வந்த காலமும் இருக்கத்தான் இருந்தது? சமூகத்திலும் இப்படிப்பட்ட பலதார திருமணத்திற்குச் சம்மதம் அளிக் கப்பட்டிருந்தது. மனைவி, ஆசைக்கு ஒரு மனைவி, சொத்துக்கு ஒரு சுகத்திற்கு வேறெத்தி, போகிற இடத்தில் வேறொத்தி, பெருமைக்கு மற்றொருத்தி என்ற முறையிலே ஒரே ஆண் பல மனைவியரை மணந்து வந்த முறையினை நாம்தான் தகாது எனக் கூறினோம், முறையல்ல என்று கண்டித் தோம்.