பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

________________

19 பல பெண் களை ஒரு ஆண் மணந்து கொள்வதினால் எவ்வளவு கேடுகள் விளைநதன! எத்தனை பெண்கள் கணவ னைக் கட்டிய பிறகு, கணவன் முகத்தைக்கூட பார்க்கமுடி யாத பயங்கர நிலையில் தத்தளித்தனர்? எத்தனை குடும்பங் களில் கணணீர் வெள்ளம் புரண்டோடியது? இந்தக் கொடுமையைக் களைய வேண்டும். ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் மணக்க வேண்டுமே தவிர இஷ்டம போல் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மனப்பேன் என்று நடப்பது அநாகரீகம் என்று நாம் கண்டித் அதன் பலனை இன்று காண்கிறோம் இன்று சட்டப்படி ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் மணந்துகொள்ள முடியும். ஒரு மனைவி உள்ளபோது மற் றொரு பெண்ணை மணந்துகொள்வது சட்டபடி செல்லுபடி யாகாது. இதோடு இரண்டாவது மனைவியை மணந்து கொள்ளும் ஆணுக்கும் அவருக்கு பெண் தரும் பெண்வீட் டாருக்கும சட்டப்படி பல வருடம் கடுங்காவல் தண்டனை விதக்கப்படும். பல மனைவியரை நான் மணப்பேன். என்னைத் தடுப் பவர் யார், என்று ஆண்மகன பேசி வந்த காலம் போய் விட்டது. ஆணுக்கு என்ன, எத்தனை பெண் வேண்டுமானாலும் மணக்கலாம். ஆண்டவனே பல மனைவியை மணந்துள் ளாரே என்று பேசி வந்த வைதீகர்களின் போக்கும் இன்று சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே ஒரு மனை வியிருக்கும்போது மற்றொரு பெண்ணை மணப்பது இன்று கிரிமினல் சட்டபடி குற்றமாகும்.