பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

 இந்த நிலைமை ஏற்படக் காரணமானவர்கள்யார் நாம்தானே! கல்லடிகளையும், அதைவிட எதிர்த்தவர்களின் படுமோசமான சொல்லடிகளையும், பிறர் ஏளனத்தையும் ஏசலையும் பொருட்படுத்தாது, தாங்கி செய்துவந்த சுலபமரி யாதைப் பணியில் பிரச்சாரத்தின் விளைவாக மக்களிடையே ஏற்பட விழிப்புணர்ச்சிதான், சர்க்கார், இப்படிப்பட்ட சட்டமியற்றுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டதற்கு காரண மாகும். முன்பெல்லாம் தனது மனைவியைப் பிடிக்கவில்லை என்பதற்காகத் தள்ளி வைத்து விட்டுத் தன்னிஷ்டமாக வேறு மனைவியை த தேடிக்கொண்டது போலச் செய்யமுடி யாது. தனது மனைவியை அததமற்றகாரணங்களுக்காக எவரும் ஒதுக்கிவிட்டு புது மனைவியைத் தேடவும் முடியாது. இருக்கும் மனைவியைத் தள்ளிவிட்டு வேறு மனை வியை மணம் புரிந்துகொள்ள வேண்டுமானால் கணவன் முதலில் நீதிமன்றத்தில் தெ விக்கவேண்டும். பிறகு தன் மனைவி கருத்தரிக்கவே முடியாது என்றோ. அவள் குடும்ப வாழ்க்கைக்கு லாயக்கே இல்லை யென்பதையோ, டாக்டர்களைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். தக்க தன் மனைவிக்கு தீராத நோய் இருந்தால் நீக்கலாம், அதைக் கோர்ட்டில் டாக்டர் மூலம் உறுதிப் படுத்திக் காட்டவேண்டும். மனைவிக்குக் குட்டம் என்பதையோ கோர்ட்டாரின் அனுமதி பெற்ற பின்னர் ஷான் எந்த மனித னும் இன்னும் வேறொருத்தியை மீண்டும் மணக்க முடியும்! இதைப் போலவே இன்றைக்கு சட்டத்தின்மூலம் மணமக்களுக்கு விவாகரத்து உரிமை தரப் போகிறார்கள்.