பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4

சீர்திருத்தத் திருமணங்கள் அதிகம் நடைபெற வேண்டும் என்பதிலும், சீர்திருத்த முறையிலேயே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதிலும் இன்றைக்கு பெரும்பாலான மக்கள் அக்கறை காட்டத்தான் செய்கிறார்கள். அவர்கள் யாராக இருந்தபோதிலும், காங்கிரஸ் கட்சியிலே உள்ள பகுத்தறிவுத் தோழரானாலும், கம்யூனிஸ்டு கட்சியிலே உள்ள சீர்திருத்த நண்பரானாலும் அல்லது வேறு எந்தக் கட்சிக்காரர் ஆனாலும் சீர்திருத்த முறையில் தான் திருமணங்கள் நடைபெற வேண்டுமென்பதில் எந்த விதமான மாறுபட்ட கருத்துக்களும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

இதைப்போல எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் பார்ப்பனருக்கு அடுத்த ஜாதி நாங்கள் தான் என்று பெருமை பேசிடும் முதலியார் வகுப்பைச் சார்ந்தவர்களாக இருப்பினும், அல்லது செட்டியார்; நாயுடு, க்ஷத்திரியர் என்று கூறிக்கொள்ளும் எந்த வகுப்பைச் சார்ந்தவர்களாக இருப்பினும், அந்த வகுப்பிலுள்ள பெரும்பாலான வாலிபத் தோழர்கள் அனைவரும் இப்படிப்பட்ட சீர்திருத்த திருமணங்கள் செய்து கொள்வதிலே பெரிதும் அக்கறை காட்டுகின்றனர்.

இன்று எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களானாலும் உலக நிகழ்ச்சிகளைக்கொண்டு முன்னேற விரும்புகிறார்கள். தெளிந்த அறிவு காட்டும் நல்ல போக்கின்படி நடக்கத் துணிவு கொண்டுள்ளனர். எனவேதான் நாள்தோறும் இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெற்று வரும் நல்ல நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த வகையில் எவ்வளவு சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெற்றாலும், இன்னமும் சாதாரண மக்களிடைய