பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

________________

78 படைத்தவன், அவனுடைய பேனா 'நானா'வுக்காகப் போரா டிற்று. நானா 'கேவலம் ஒரு வழுக்கி விழுந்த வனிதை தான். அவளுக்காகப் போராடிய ஜோலாவால்தான் டிரைபஸ் விஷயமாகவும் போராட முடியும்; போராடினார் -வாழ்க்கை முழுவதுமே வறியோருக்காகவே போராடிய வீரர் ஜோலா. தனக்காகப் போராடும்படி டிரைபஸ் ஜோலாவைக் கேட்டுக் கொள்ளவில்லை. அவன் அநீதிக்கார ரால் அவதிக்கு ஆளாக்கப்பட்டான் என்று அறிந்தார். ஆவேசம் பெற்றார், ஆற்றல் அவ்வளவையும் செலவீட்டார், 'நீதி' வெளிவந்தது. 'நானா சம்பவமும் அப்படிப்பட்டதே. ஜோலா, அவரது நண்பனுடன் மிகமிகச் சாமான்யர்கள் மட்டுமே செல்லும் சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட்டுகொண் டிருந்தார்! ஒருநாள் திடீரென்று கூக்குரல் கேட்டது. பெண்களின் அலறலொலி நாலாபக்கங்களிலிருந்தும் கிளம் பியது. ஜோலாவும் நண்பனும் ஜன்னலோரத்தில் சென்ற பொழுது ஏராளமான பெண்கள், விரட்டுகிற போலீசி மிருந்து தப்பி அங்குமிங்கும் சிதறிக் கொண்டிருந்தனர். விபசார விடுதிகளில் போலீசார் நுழைந்து விரட்டினர். விபசாரத்தையல்ல, விபசாரிகளை ! மேல்மூச்சு வாங்க ஒரு இளமங்கை அந்தக் கடைக்குள் நுழைந்து ஒரு தூணுக்குப்பின்னால மறைந்துகொண்டாள். பயத்தாலும் திகிலாலும் அலைக்கப்பட்ட அந்த மங்கையை ஜோலா தன்னருகில் அழைத்தான். அச்சத்தோடு அவள் மெதுவாக அவன் பக்கத்திற்கு வந்தாள்; எனினும் போலீஸ்காரன் கடைக்குள் நுழைந்ததும் தப்பியோட அவள் முயன்றாள். ஜோலா அவள் பக்கம் சென்று, அவள் தன்னைச் சேர்ந்த நண்பர் எனக் கூறிப்