பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

79 அவள் போலீஸ்காரனை அனுப்பி விட்டான். பிறகு மூவரும் நாற்காலிகளில் அமர்ந்தனர் வறுமை எவ்வளவு வாட் டிய போதிலும், விடாத அழகின் சாயல் முகத்தில் இருந்தது. அவளுடைய இழிதொழில் அவளை முற்றும் சிதைக்கவில்லை. ஜோலாவின் நண்பன் ஒரு ஓவியக்காரன். அவன் அவளுடைய உருவத்தை அங்கேயே தீட்ட ஆரம்பித்தான். ஜோலா அவளுடைய வரலாற்றைக் கேட்க ஆவலுள்ளவனாயிருந்தான். மிக வணக்கத்துடன் "உங்கள் பெயரென்ன அம்மா" எனக் கேட்டான் ஜோலா. பெயரா? அவள் வாழ்ந்த ஒவ்வொரு ஊரிலும் அவளுக்கு ஒவ்வொரு பெயர் இருந்தது.- பெயர்களைக் கூறிவிட்டு, "ஏன் கேட்கீறீர்கள்" எனக் கேட்டாள். 'நானும் உங்களைப் போல ஒருவன்தான் அம்மா' எனக் கூறிவிட்டு, பணியா ளனைக் கூப்பிட்டு அவளுக்குச் சிற்றுண்டியளிக்கச் சொன்னான். அவள தூரத்துக் கிராமத்தைச் சேர்ந்தவள். பாரி சுக்கு வரும்பொழுது அவளது வயது பதினேழு. கையில் காசு கிடையாது. இளமையும், எழிலும்தான் மிஞ்சியவை. வாழ்வு! அது ஏதோ அவளால் கனவு காணப்பட்ட பொருள் தன் பழைய நினைவுகளைக் கூறும் பொழுது சொற்கள் தழதழததன ; நீர்த்துளி படர்ந்தகண்கள் சொற் றொடர்களை முடித்தன. அவளுடைய தாயகம் - அங்கே செல்லமுடியாது. குளிர், பிணி, பட்டினி - இவைகளால் வேட்டையாடப்பட்ட மிருகம், போலிசாரால் விரட்டப் படும் அனாதை. வரலாற்றை ஜோலா உற்றுக் கேட்டுக்கொண்டி ருந்தான். பலவாண்டுகளாக அமைதியை அறியாத அவள், தன் துயரை மற்றொருவரிடம் கூறுவதில் சிறிது அமைதி யடைந்தாள். இருவரும் நேரம் போவதையே கவரிக்க