பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

அன்பு வெள்ளம்



கடவுளின் இயல்பினில் இணைந்து அவ் இயல்பினை நம்மில் கொண்டுள்ளோம். கடவுளின் இயல்போ, அன்பு! புதிய படைப்பு! அன்பின் படைப்பு! அந்தப் புதிய படைப்பின் வடிவமைப்பு அன்பு. அந்த அன்பினால் உருவாக்கப் பெற்றவர்கள் நாம்.

அன்பு உங்களுடைய இயல்பாகும் என்றால், உங்களில் அரியணை போட்டு அமர்ந்து கொண்டிருந்த தன்னலம் தூக்கி எறியப்பட்டு விடும்.

ஆனால் என் செய்வோம், தன்னலமிக்கவரால் சூழப்பட்டிருக்கிறோம்; தன்னலத்தால் சூழப்பட்டிருக்கிறோம். இயற்கையாக நம் வாழ்க்கையுடன் தொடர்புடைய அத்தனையும் தன்னலப் பண்பும் வண்ணமும் கலந்தனதாகவே இருக்கின்றன. அந்தத் தன்னலப் பாங்கினை, விலங்குகளிடத்தில் காணலாம். பொதுவாக எல்லா இடத்தும் தன்னலமிக்க மனிதனைக் காணலாம்!

நம்முடைய தொழில் - முதல் அதாவது, தொழிலாளி முதலாளி வகுப்பு போர் நடைபெறக் காரணமே இந்தத் தன்னலம்தான்்! உலகில், இதற்கெல்லாம் தேவையான ஒன்று நிலையான அடையாளம் எனப்படும் கடவுளின் இயல்பான அன்புதான்்! அத்தகைய அன்பினை நாம் எங்கெங்கும் எல்லாரிடத்தும் நின்று நிலைத்தோங்கச் செய்ய வேண்டும். அன்பினுக்கு அனைவரும் ஆட்பட வேண்டும். அதுவொன்றே நாம் செய்ய வேண்டியது. மீண்டும் படைக்கப் பெற்ற உயிர்ப்பின் அகத்துண்டுதல் உணர்ச்சியினைப் பெற்றால் நாமும் அன்பில் வாழ்ந்த பண்பாளர் போன்று வாழ்ந்திடலாம்.

ஆயினும் நாம் என்ன செய்கிறோம்...... நம்மில் புதிதாக மீட்டும் படைக்கப் பெற்ற உயிர்ப்பின் அகத்துண்டல் உணர்ச்சிக் கனலையே அணைத்துவிடுகிறோம். அதோடு அன்பாக இருப்பது என்பது நம்மால் முடியாதது. அன்பாக இருக்க வேண்டும் என்று நம்மை அன்பில் இணைத்துக் கொள்வதுகூட நம்மால் ஆகக் கூடியது இல்லை என்று சொல்கிறோம். அதுமட்டுமில்லை அன்பு நெறியில் நடக்க நாம் அஞ்சுகிறோம்.

அன்பினை உலகில் வெளிப்படுத்திய சான்றோரை, அவரைக் காட்டும் நூல்களைக் கூட சார்ந்து நிற்க நம்பிக்கை வைத்திட அஞ்சுகிறோம். நம்மில் இயல்பாக இருக்கிற அன்பைக் கூட வெளிப்படவிடப் பயப்படுகிறோம்.