இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
50 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை
100. காதலனுடன் வருவாள்!
மள்ளர் அன்ன மரவம் தழிஇ, மகளிர் அன்ன ஆடுகொடி நுடங்கும் அரும் பதம் கொண்ட பெரும் பத வேனில், 'காதல் புணர்ந்தனள் ஆகி, ஆய்கழல் வெஞ் சின விறல் வேற் காளையொடு இன்று புகுதரும் என வந்தன்று, துதே. - ஐங் 400 செவிலி “பெற்ற தாயே! வீரர் போன்ற மரவ மரங்களை மகளிர் போலும் அசையும் கொடிகள் தழுவி அசையும் அருமையான உண்ணும் பொருள்களை உடைய சிறந்த வேனிற் பருவத்தில், வதுவை செய்து கொண்டவளாய் நம் மகள் ஆராய்ந்து அணிந்து கொண்ட வீரகழலும் கொடிய சினமும், விறல்மிக்க வேலும் உடைய காளையைப் போன்ற வனுடனே இன்று மகள் வருவாள் என்று துரதர் கூறு கின்றனர்” என்று சொன்னாள்.
$$ 苹