அபிதா O 113
யிலிருந்து குதிரைமேல் வீட்டுக்குத் திரும்பி வந்திருப்பான். முகத்தில் அவ்வளவு வெற்றி.
“என்னடா அம்பி இது?”
(ஒ! இவனும் ‘அம்பி'யா?)
“மலிவா வரும்போல இருக்கு. என்ன அபிதா வாங்கலாமா?”
மாமி எரிந்து விழுந்தாள்.
“அவளை என்ன கேள்வி: பெரிய மேரு”
“உன்னையென்ன கேள்வி வாங்கப் போறவன் நான்!”
“ஆமாம், என்னைக் கேட்பையா? நான் என்ன உன் குதிகாலில் ஈஷிய சாணிக்குச் சமானம்-”
“இதோ பார் அக்கா, இதனால்தான் எனக்கு இங்கே வரவே பிடிக்கமாட்டேங்கறது. உன் சண்டை ஸ்வாரஸ்யமாவேனுமிருக்கா, படு bore! வா அபிதா, பின்னால் ஏறு, நாம் போகலாம்!”
“நானா?” அபிதா பின்னடைந்தாள்.
“நீதான், நீயேதான்! பின் என்ன உன் சித்தியா? பயப்படாதே ஊம்- ஏறு!”
“நன்னாயிருக்குடா வயசுப் பெண்ணை நீ கூப்பிடற லக்ஷணம்!”
“நீ ஒருத்தியே உடன் பிறந்தாள் போதும்போல இருக்கே! நான் யாரு உன் தம்பி, இவளுக்கு மாமா!”
“இல்லை இல்லை நான் இவாளோடேயே வண்டியில் வரேன்.” -
அ- 8