பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகல் அடைந்தேன்

47

கும் நிலையை மாற்றும் தீய சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் நான் அகன்று வந்து விட்டேன்" என்று சொல்கிறார்.

நம்முடைய நாட்டில் ஞானிகளும் பக்தர்களும் இல்லாமல் போகவில்லை. அவர்களை நாம் சில சமயங்களில் சந்திக்கிறோம். கோயில் குளங்களுக்கும் குறைவில்லை. அவ்விடங்களுக்கு எப்போதேனும் போகிறோம். ஞான நூல்கள் பல பல உள்ளன. அவற்றை நமக்குச் செளகரியமாக இருக்கும் நேரத்தில் படிக்கிறோம்; சொல்லக் கேட்கிறோம். இவ்வளவும் நம்முடைய வாழ்நாளில் சில நாழிகைகளே நிகழ்கின்றன. மற்ற நேரங்களிலெல்லாம் காமம் குரோதம் முதலிய ஆறு குணங்களுக்கு அடிமையாகி அவற்றை வளர்க்கும் பொருள்களோடு செறிந்து நிற்கிறோம். அந்த வாசனை நம் உள்ளத்தில் படலம் படலமாகச் செறிந்திருக்கிறது. அதனால், தப்பித் தவறிக் கோயிலுக்குப் போனால் அங்கும் அந்த வாசனை வந்து நலம் பெறாமல் தடுக்கிறது. கடவுளின் திருவுருவத்தைத் தரிசித்து உருகவேண்டியிருக்க, அங்கே வந்திருக்கும் மனிதர்களைப் பார்க்கிறோம்; அதிலிருந்து மனம் எங்கெங்கோ செல்கிறது, ஆகவே, நாம் இறைவன். அடியிலே என்றும் மாறாத அன்பை வைக்கப் பழகிக் கொள்ளவில்லை. பழகுவதற்குப் பிரபஞ்ச வாசனை நம்மை விடுவதில்லை. -

நாம் பழகும் மனிதர்களில் பெரும்பாலோர் நம்மிடம் உலகியலைப்பற்றியே பேசுகிறார்கள். யாரேனும் நல்லவர்களைக் கண்டு அவர்களோடு பழகப்போனால், அந்தப் பேதையர் அவர்களை இகழ்கிறார்கள். அவர்களுடைப் பெருமையை எண்ணுவதில்லை. நாம் நல்லவராவதற்கு எவ்வளவோ நாட்களாகலாம். அது அருமையான செயல். ஆனால் நல்லவர்களை நல்லவர்கள் என்று