பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
58


ஏக்கத்தோடும் பெருநம்பிக்கையோடும் நின்று கொண்டிருந்த சின்ன முயலின் தோற்றம் அதற்கு இரக்கத்தை உண்டாக்கியது.

“சின்னப் பயலே, உன் ஆசையை நிறைவேற்றுகிறேன். நாளை முதல் உன்னை அமைச்சனாக ஆக்குகிறேன். உனக்கு நாள் ஒன்றுக்கு ஒரு புறா வீதம் சம்பளம் தருகிறேன்” என்றது சிங்கம்.

முயல் விழி, விழியென்று விழித்தது. எனக்கு எதற்குப் புறா என்று அது சிந்தித்தது.

உடனே கல கலவெனச் சிரித்த சிங்கம் “ஒவோ! நீ சைவம் அல்லவா? உனக்கு நாள் ஒன்றுக்கு ஒரு முட்டைக்கோசு சம்பளமாகத் தருகிறேன்?” என்று கூறியது.

முயலுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. சிங்கத்தின் காலடியைத்தொட்டு வணங்கி விடை பெற்றுக் கொண்டு துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடியது. அது தங்கியிருக்கும் குகைக்குச் சென்று அங்கிருந்த எல்லா முயல்களிடமும் “நான் அமைச்சனாகி விட்டேன் அரசர் ஆணையிட்டு விட்டார். நாளைமுதல் இந்தக் காட்டுக்கு நான் ஓர் அமைச்சன்” என்று சொல்லிப் பெருமைப் பட்டுக் கொண்டது.

முதலில் அந்த முயல்கள் அதன் பேச்சை நம்ப வில்லை. ஆனால் அது நடந்த செய்திகளையெல்லாம் தொகுத்துக் கூறிய பொழுது, அந்த முயல்கள்