உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

தாகூர் போன்ற

மனிதருள்

235

மாணிக்கங்களின் அருட்

பார்வையையே அது களங்கப்படுத்தியுள்ளது என்பதை நாம் காண வேண்டும்.

ஜனாப் ஜின்னா போன்ற பகுத்தறிவார்ந்த தேசிய முஸ்லிம் அறிஞர்கூடக் காந்தியடிகளை எளிதில் உணர முடியாமற் போனதற்கும், இந்தியாவில் இனி இஸ்லாம் வாழமுடியாது என்று மனக்கசப்புற்று விட்டதற்கும்,திராவிட இயக்கத்தவர் பலர் காந்தியடிகள் வாழ்ந்த காலத்தில் அவர் உயர் பண்புகளை எளிதில் காண முடியாமற்போனதற்கும் காரணம், அவர் வருணாசிரம தருமத்தைச் சனாதன தருமம், கடவுள் நெறி என்று ஏற்றதுடன் மட்டுமன்றி, அதுவே இயேசுவும், முகமது நபிகளும் கூடச் சென்றெட்டிவிடாத உயர் நெறி, உயர் தெய்விக நெறி என்று புது விளக்கங்கள் தந்ததேயாகும்.

-

விவேகானந்த அடிகள் கேரளத்தைப் பார்த்து அதன் சாதி மத அநீதிகளைக் கண்டு, அதை ஒரு பைத்தியக்காரர் கண்காட்சி சாலை என்றாராம்! அந்தப் பெயர் உண்மையில் ஆரியம் உலாவும் வரை இந்தியத் துணைக் கண்டம் முழுமைக்கும் - ஆரியம் இன்று புதிதாகப் பரவி வரும் இலங்கை, பர்மா, மலாயா ஆகிய நாடு களுக்கு முற்றிலும் பொருந்தும் என்னலாம்.