தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2
99
யெடுத்திருந்தான். ஆகவே அவசர அவசரமாக இரு கட்சி களையும் இணைத்து வைத்து விட்டு அவன் திரும்பிச் சென்றான். இராமராயன் ஆதிக்கம் முன்னிருந்தபடியே நீடித்தது.
அரவீட்டு மரபின் புரட்சி : துங்கபத்திரைப் போர்
அச்சத தேவராயன் 1542-ல் உலக வாழ்வு நீத்தான். வயது வராத அவன் புதல்வன் முதலாம் வேங்கடனுக்கு அரசுரிமை தரப்பட்டு அவன் பெயரால் அவன் தாய் மாமனான சாலகம் திருமலை ஆட்சிப் பேரரசனானான். ஆனால், தாயரசியான வரதாதேவி தன் உடன்பிறந்தான் மீது ஐயம் கொண்டு பிஜப்பூர் அரசன் முதலாம் அவி ஆதில்கானை (1537 -1579) வரவழைத்தாள். ஆனால், வரும் வழியிலேயே திருமலை பணம் கொடுத்து பிஜப்பூர் அரசனைத் திருப்பி அனுப்பிவிட்டு அரசியின் செயலுக்கு எதிர் செயலாகக் குத்தியில் காவலில் வைக்கப்பட்டிருந்த அச்சுதன் தம்பி புதல்வன் முதலாம் சதாசிவனை அரசிருக்கையில் அமர்த்தி அவனுக்கு ஆதரவாக மறுபடியும் பிஜப்பூர் அரசனையே படை யெடுக்கும்படி தூண்டினான்.
ஆட்சி நிலை பற்றிக் கிலிகொண்ட நகரமக்கள் திரண் டெழுந்து நிலைமையை அவசரமாகச் சமாளிக்கும்படி திரு மலையை ஆட்சியாளனாக ஒத்துக் கொண்டனர். இதனால் திருமலை முன்பு தானே அழைத்த அயலரசனைத் தானே முறி யடித்துத் துரத்தினான். ஆனால், அரிதில் பெற்ற இவ்வாட்சியை அவன் நீடித்துத் துய்க்க முடியவில்லை. முதலாம் வேங்கடனையும், சதாசிவன் நீங்கலான அரச குடும்பத்தினர் அனைவரையும் அவன் கொன்று குவித்துக் கொடுங்கோல் ஆற்றினான். பெருமக்கள் கிளர்ந்தெழுந்து மீண்டும் பிஜப்பூர்ப் பேரரசன் உதவி நாடினர்.
இதுவரை புரட்சியின் போக்கை விலகி நின்று பார்த்துக் கொண்டிருந்தான். முன்பே ஆதிக்கக் கயிற்றைக் கைப்பற்றியிருந்த இராமராயன். அவன் திடுமெனப் பெனு கொண்டாவைக் கைப்பற்றிப் பல போர்களில் திருமலையை முறியடித்தான். துங்கபத்திரையருகே நடத்திய போரில் அவனைக் கொன்று சதாசிவனை முடிசூட்டினான்.