40
அப்பாத்துரையம் - 17
1325-ல் முகமது துக்ளக் தவிசேறினான். அவன் ஆட்சித் தொடக்கத்திலேயே காம்பிலிதேவன் தில்லி அரசுக்குத் திறை அனுப்ப மறுத்துத் தன்னாண்மையுடன் தன் வல்லமை பெருக்க முயன்றான். இச்சமயம் முகமதுக்கு எதிராக அரசுரிமை கோரிச் சாகர் மாகாண ஆட்சியாளனாகிய பகாவுதீன் கார்ஷப் கிளர்ந் தெழுந்தான். காம்பிலிதேவன் அவனுக்கு உடந்தையாக இருந்து வந்தான்.
கார்ஷப்பை அடக்குவதற்காக முகம்மது குஜராத்தின் ஆட்சித் தலைவனான மாலிக் சாதாவையும், தேவகிரி ஆட்சித் தலைவ னான மஜீர் அபு ரிஜாவையும் பெரும் படையுடன் அனுப்பினான்.அப்படைத் தலைவர்கள் பகாவுதீன் கார்ஷப்பைக் கோதாவரிப் போரில் முறியடித்து அவனை அவனாண்ட சாகர் வரையும் விடாமல் துரத்திச் சென்றனர். துணையற்ற நிலையில் கார்ஷப் தன் குடும்பத்துடன் காம்பிலி தேவனிடம் அடைக்கலம் புகுந்தான்.
காம்பிலி வீழ்ச்சி: 1327
காம்பிலி அரசனுக்குக் கும்மடம், ஹொச துர்க்கம் என்ற இரண்டு வலிமை வாய்ந்த கோட்டைகள் இருந்தன. துக்ளக் படைகள் இரு தடவைக் கும்மடக் கோட்டையைத் தாக்கி முற்றுகையிட முயன்றும், அதனைக் கைப்பற்ற முடியாமல் திரும்ப வேண்டி வந்தது. ஆனால், மூன்றாவது தடவை குஜராத்து மாகாணத் தலைவனான மாலிக் சாதா அக்கோட்டையை மும்முரமாகத் தாக்கிக் கைப்பற்றினான். அத்துடன் ஹொச துர்க்கத்தையும் முற்றுகையிட ஏற்பாடுகள் செய்தான்.
காம்பிலிதேவன் தென்னாட்டுவரலாற்றில் பொன்னெழுத்துக் களால் பொறிக்கத்தக்க வீரமும் தன்மானமும் உடையவன். அடைக்கலம் புகுந்தவரை ஆருயிரளித்தும் ஆதரிக்க அவன் முனைந் தான், ஆகவே ஹொச துர்க்கம் பிடிபட்டுத் தானழிந்தாலும், அடைக்கலம் புகுந்த இஸ்லாமிய நண்பனை அழியவிடக் கூடாது என்று திட்டமிட்டான். ஹொய்சளர் தனக்குப் பகைவரென்று தெரிந்தாலும், நிலைமையை விளக்கி அவனுக்கு ஆதரவு தருமாறு மூன்றாம் பல்லாளனுக்குக் கடிதம் எழுதினான். கார்ஷப்பையும் அவன் குடும்பத்தையும் துவார