உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




132

||--

அப்பாத்துரையம் - 22

திரைகள் இச்சமயம் இறுக இழுத்துக் கட்டப்பட்டிருந்தன. அவற்றினூடாக மின்மினி போல மினுங்கிய ஒரு விளக்கொளி மட்டும் வெளியே தெரிந்தது.

டு

அவன் அன்று குறிக்கொண்டு சென்ற இடம் ரோக்குஜோ சீமாட்டியின் இல்லமே. இங்கே முற்றிலும் வேறுபட்ட காட்சிகள் அவன் கண்களுக்கு விருந்தளித்தன. அழகிய பூங்கா, அதனை அடுத்து நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டம், அகன்ற இன்ப வாய்ப்புள்ள மனையிடம், பகட்டான இந்த ஆரவார அழகுப் பரப்புகளுக்குரிய அழகியின் இன்பத்தோழமை ஆகியவை அவன் உள்ளத்திலிருந்து தழை குழை வேலிகளையும் வெண்மலர்களையும் கொண்ட மனையின் காட்சியை முற்றிலும் அகற்றி விட்டன.

வரும்போது எண்ணியதைவிட நீடித்து அவன் இங்கே தங்கிவிட்டான். அங்கிருந்து தன் மாளிகை நோக்கி அவன் திரும்பியபோது, கதிரவன் ஏற்கெனவே உச்சி நோக்கி நெடுந்தொலை சென்றிருந்தான். இப்போது மீண்டும் ஒரு தடவை அவன் தழை குழை வேலிக்குரிய வீட்டின் வழியாகச் சென்றான். அதே பக்கமாக இதற்கு முன் அவன் எண்ணற்ற தடவைகள் சென்றிருக்கிறான். ஒரு தடவையாவது வழியில் எதிலும் கவனம் செலுத்தியதில்லை. ஆனால் விசிறி பற்றிய நிகழ்ச்சி இத்தெருக்களின் வழி செல்லும் பயணங்களுக்கு முன்பு இல்லாத ஒரு புத்துயிர் கொடுத்து விட்டது. அவன் அடிக்கடி தன்னைச் சுற்றிலும் ஆவலுடன் நோக்கினான். அவ்வீடுகளில் வசிப்பவர்கள் பற்றி யெல்லாமே விவரமான செய்திகள் அறிய விரும்பினான்.

கோரெமிட்சு கெஞ்சியின் மாளிகைப்பக்கம் வரப் பல நாளாயிற்று. வந்த போது இத்தாமதத்துக்கு விளக்கம் கூறினான். ‘என் தாய் வரவர உடல் நலிவுற்று வந்தாள். அவளை விட்டு வருவது அரியதாயிற்று' என்று கூறினான். பின் கெஞ்சியை இன்னும் நெருங்கி அணுகித் தாழ்ந்த குரலில் மேலும் சில தகவல்கள் தெரிவித்தான். 'மனை பற்றி நான் மேலும் விசாரணைகள் செய்தேன். ஆனால் மிகுதியாக எதுவும் அறிய முடியவில்லை. சென்ற வைகாசி ஆனியிலிருந்து தான் அங்கே யாரோ வந்து தங்கி வருவதாகத் தெரிகிறது. ஆனால்